ETV Bharat / state

அத்திக்கடவு அவிநாசி திட்டம்: அதிமுக மீது துரைமுருகன் குற்றச்சாட்டு!

author img

By

Published : Dec 6, 2022, 9:42 PM IST

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை கடந்த ஆட்சியில் அவசரப்பட்டு துவக்கிவிட்டு முடிக்காமல் சென்றுவிட்டனர் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்திக்கடவு அவிநாசி திட்டம்: அதிமுக மீது துரைமுருகன் குற்றச்சாட்டு
அத்திக்கடவு அவிநாசி திட்டம்: அதிமுக மீது துரைமுருகன் குற்றச்சாட்டு

வேலூர்: வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 'அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் முதற்கட்டப் பணிகள் முடித்தபிறகு தான் அடுத்த கட்டப்பணிகள் துவங்கும். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை கடந்த ஆட்சியில் அவசரப்பட்டு துவக்கிவிட்டு முடிக்காமல் சென்று விட்டனர். இத்திட்டத்தை பொறுத்தவரை கடந்த ஆட்சியாளர்கள் செய்ததைப் போலவே தற்போதும் செய்ய முடியாது.

அந்த திட்டத்தைப் பொறுத்தவரை, ஒரு ஏரியில் இருந்து மற்றொரு ஏரிக்கு தண்ணீர் குழாய் மூலம் தான் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் பல இடங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்தியே தண்ணீர் எடுக்க வேண்டும். தண்ணீர் செல்லும் இடமெல்லாம் தனியார் நிலங்களாக உள்ளன. ஆகவே, அவைகளை எடுக்க வேண்டிய தொடர் பணிகள் உள்ளன.

அத்திக்கடவு அவிநாசி திட்டம்: அதிமுக மீது துரைமுருகன் குற்றச்சாட்டு

இந்தப் பணிகளை அப்படியே விட்டுவிட்டு அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்க வேண்டும் என்று சொன்னால், இதையெல்லாம் செய்யாமல் ஏன் தொடங்கினீர்கள் என்ற கேள்வி வரும். ஆகவே, செய்கிற பணிகளை முழுமையாக செய்த பிறகு அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடங்கப்படும்' என அவர் கூறினார்.

இதையும் படிங்க: CCTV: உணவு தேடி ஊருக்குள் புகுந்த யானைகளால் அச்சத்தில் மக்கள்

வேலூர்: வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 'அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் முதற்கட்டப் பணிகள் முடித்தபிறகு தான் அடுத்த கட்டப்பணிகள் துவங்கும். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை கடந்த ஆட்சியில் அவசரப்பட்டு துவக்கிவிட்டு முடிக்காமல் சென்று விட்டனர். இத்திட்டத்தை பொறுத்தவரை கடந்த ஆட்சியாளர்கள் செய்ததைப் போலவே தற்போதும் செய்ய முடியாது.

அந்த திட்டத்தைப் பொறுத்தவரை, ஒரு ஏரியில் இருந்து மற்றொரு ஏரிக்கு தண்ணீர் குழாய் மூலம் தான் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் பல இடங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்தியே தண்ணீர் எடுக்க வேண்டும். தண்ணீர் செல்லும் இடமெல்லாம் தனியார் நிலங்களாக உள்ளன. ஆகவே, அவைகளை எடுக்க வேண்டிய தொடர் பணிகள் உள்ளன.

அத்திக்கடவு அவிநாசி திட்டம்: அதிமுக மீது துரைமுருகன் குற்றச்சாட்டு

இந்தப் பணிகளை அப்படியே விட்டுவிட்டு அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்க வேண்டும் என்று சொன்னால், இதையெல்லாம் செய்யாமல் ஏன் தொடங்கினீர்கள் என்ற கேள்வி வரும். ஆகவே, செய்கிற பணிகளை முழுமையாக செய்த பிறகு அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடங்கப்படும்' என அவர் கூறினார்.

இதையும் படிங்க: CCTV: உணவு தேடி ஊருக்குள் புகுந்த யானைகளால் அச்சத்தில் மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.