ETV Bharat / state

'ஜெயித்தாலும் தோற்றாலும் திமுக அஞ்சாது' -ஏ.வ.வேலு - DMK is not afraid of failure victory or defeat

வேலூர்: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி, தோல்வியை கண்டு திமுக ஒரு போதும் அஞ்சாது என்று முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார்.

av velu
av velu
author img

By

Published : Dec 7, 2019, 6:32 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மக்களவை உறுப்பினர் அலுவலக திறப்பு விழா மாவட்டக் கழக பொறுப்பாளர் முத்தமிழ் செல்வி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஏ.வ. வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏ.வ. வேலு, "திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியானது ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. பொதுமக்களின் நலன் கருதியே திருப்பத்தூரில் மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு

திண்டிவனம், ஜோலார்பேட்டை இடையேயான ரயில்வே பாதை அமைப்பதற்கு தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அது குறித்து மக்களவைக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நமது உறுப்பினர் சி.என். அண்ணாதுரை கேள்வி நேரத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்கான இடத்தை கையகப்படுத்துவதில் அரசு மெத்தனம் காட்டுகிறது. உடனடியாக நிலத்தை கையகப்படுத்தி இந்த ரயில்வே இருப்புப் பாதை அமைப்பதற்கு அரசு முழு மூச்சில் செயல்பட வேண்டும். புதிய மாவட்டங்களுக்கான வார்டு வரையறை செய்யப்பட்ட பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என திமுக வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில்தான் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

வார்டு வரையறை செய்யப்படாமல் ஒருபோதும் தேர்தலை நடத்த முடியாது. இந்தப் பணியானது நான்கு மாதங்களில் நிறைவு பெறும். நிறைவு பெற்ற பின்னரே தேர்தலை நடத்த முடியும். இந்தத் தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன் பிறகே முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலை கண்டு திமுக பயன்படுகிறது என்ற கேள்விக்கு, ஜெயித்தாலும் தோற்றாலும் திமுக ஒருபோதும் எதைக் கண்டும் அஞ்சப் போவதில்லை என்றார்.

இதையும் படிங்க: அமைச்சர் வீட்டு வாசலில் காரை நிறுத்தி அயர்ந்து தூங்கியவரால் சலசலப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மக்களவை உறுப்பினர் அலுவலக திறப்பு விழா மாவட்டக் கழக பொறுப்பாளர் முத்தமிழ் செல்வி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஏ.வ. வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏ.வ. வேலு, "திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியானது ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. பொதுமக்களின் நலன் கருதியே திருப்பத்தூரில் மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு

திண்டிவனம், ஜோலார்பேட்டை இடையேயான ரயில்வே பாதை அமைப்பதற்கு தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அது குறித்து மக்களவைக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நமது உறுப்பினர் சி.என். அண்ணாதுரை கேள்வி நேரத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்கான இடத்தை கையகப்படுத்துவதில் அரசு மெத்தனம் காட்டுகிறது. உடனடியாக நிலத்தை கையகப்படுத்தி இந்த ரயில்வே இருப்புப் பாதை அமைப்பதற்கு அரசு முழு மூச்சில் செயல்பட வேண்டும். புதிய மாவட்டங்களுக்கான வார்டு வரையறை செய்யப்பட்ட பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என திமுக வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில்தான் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

வார்டு வரையறை செய்யப்படாமல் ஒருபோதும் தேர்தலை நடத்த முடியாது. இந்தப் பணியானது நான்கு மாதங்களில் நிறைவு பெறும். நிறைவு பெற்ற பின்னரே தேர்தலை நடத்த முடியும். இந்தத் தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன் பிறகே முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலை கண்டு திமுக பயன்படுகிறது என்ற கேள்விக்கு, ஜெயித்தாலும் தோற்றாலும் திமுக ஒருபோதும் எதைக் கண்டும் அஞ்சப் போவதில்லை என்றார்.

இதையும் படிங்க: அமைச்சர் வீட்டு வாசலில் காரை நிறுத்தி அயர்ந்து தூங்கியவரால் சலசலப்பு!

Intro:திமுக ஒருபோதும் தேர்தலை கண்டு அஞ்சாது முன்னாள் அமைச்சர் ஏ.வா வேலு திருப்பத்தூரில் பேட்டி
Body:


திருப்பத்தூர் மாவட்டம் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மாவட்ட கழக பொறுப்பாளர் முத்தமிழ் செல்வி தலைமையில் திறப்புவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை மற்றும் முன்னாள் உணவு துறை அமைச்சர் ஏ.வ. வேலு பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி ஆனது 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. பொதுமக்களின் நலன் கருதியே திருப்பத்தூரில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டிருக்கிறது அருகில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளதால் பொதுமக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய முடியும். திண்டிவனம் ஜோலார்பேட்டை இடையேயான ரயில்வே பாதை அமைப்பதற்கான தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டது அது குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நமது உறுப்பினர் சி என் அண்ணாதுரை கேள்வி நேரத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கான இடத்தை கையகப்படுத்துவதில் அரசு மெத்தனம் காட்டுகிறது. உடனடியாக நிலத்தை கையகப்படுத்தி இந்த ரயில்வே இருப்புப் பாதை அமைப்பதற்கு அரசு முழு மூச்சில் செயல்பட வேண்டும். இது சம்பந்தமாக அனைத்து கட்சிகளும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல் சென்னையில் இருந்து திருப்பத்தூர் வரை இயக்கப்பட்டு வந்த ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை தற்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது அதை உடனடியாக திருப்பத்தூர் வரை நீட்டிக்க வேண்டும். புதிய மாவட்டங்களுக்கான வார்டு வரையறை செய்யப்பட்ட பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என்பது திமுகவின் அறிக்கை வெளியிட்டிருந்தது அதைத்தான் தற்போது நீதிமன்றம் கூறியிருக்கிறது. வார்டு வரையறை செய்யப் படாமல் ஒருபோதும் தேர்தலை நடத்த முடியாது. இந்தப் பணியானது நான்கு மாதங்களில் நிறைவு பெறும் நிறைவு பெற்ற பின்னரே தேர்தலை நடத்த முடியும். இந்த தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது அதன் பிறகு அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலை கண்டு திமுக பயன்படுகிறது என்ற கேள்விக்கு ஜெயித்தாலும் தோற்றாலும் திமுக ஒருபோதும் எதைக் கண்டும் அஞ்சப் போவதில்லை என்றும் கூறினார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.