ETV Bharat / state

வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1400 போலீசார் குவிப்பு

வேலூர்: அரக்கோணம் மக்களவைத் தொகுதி, சோளிங்கர், ஆம்பூர், குடியாத்தம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது1,400 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : May 23, 2019, 7:05 AM IST

வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1400 போலீசார் குவிப்பு

இந்தியாவில் 17ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி, சோளிங்கர், ஆம்பூர், குடியாத்தம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்றது.

இதில், அரக்கோணம் மக்களவைத் தொகுதி, சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாலாஜாபேட்டையில் உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆம்பூர், குடியாத்தம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை எட்டு மணிக்கு எண்ணப்படவுள்ளன.

அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் காவல் துறையின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் 750 காவல் துறையினர், வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் 650 காவல் துறையினர் என மொத்தம் 1400 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடபடவுள்ளதாக வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர இரண்டு மையங்களிலும் தலா ஒரு கம்பெனியைச் சேர்ந்த துணை ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் 17ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி, சோளிங்கர், ஆம்பூர், குடியாத்தம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்றது.

இதில், அரக்கோணம் மக்களவைத் தொகுதி, சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாலாஜாபேட்டையில் உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆம்பூர், குடியாத்தம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை எட்டு மணிக்கு எண்ணப்படவுள்ளன.

அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் காவல் துறையின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் 750 காவல் துறையினர், வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் 650 காவல் துறையினர் என மொத்தம் 1400 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடபடவுள்ளதாக வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர இரண்டு மையங்களிலும் தலா ஒரு கம்பெனியைச் சேர்ந்த துணை ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Intro:தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் வடக்கு மண்டல நகராட்சி தகவல்


Body:வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி மற்றும் சோளிங்கர் ஆம்பூர் குடியாத்தம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது இதில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் மற்றும் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் வாலாஜாபேட்டை உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது இதேபோல் ஆம்பூர் குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியிலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது அங்கு ஒரு கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் உள்ளனர் இந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை காலை 8 மணிக்கு நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மொத்தம் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளதாக வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் தெரிவித்துள்ளார் அதாவது ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் 750 போலீசாரும் வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் 650 போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர் இது தவிர இரண்டு மையங்களிலும் தலா ஒரு கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வடக்கு மண்டல நாகராஜ் இன்று ராணிப்பேட்டை பொறியல் கல்லூரி வந்தார் அவருடன் வேலூர் சரக டிஐஜி வனிதா மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் ஆகியோரும் உடனிருந்தனர் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்பதால் அதற்கு முன்னதாகவே அரசியல் கட்சி முகவர்கள் உள்ளே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் இந்திய நாட்டையே ஆளப் போகும் தலைவர் யார் என தெரிந்து கொள்வதில் இன்னும் சில நேரங்களே உள்ளதால் அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் உச்சகட்ட பரபரப்புடன் காணப்படுகின்றனர்.


திடீர் விபத்தால் பரபரப்பு

ராணிப்பேட்டை பொறியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்ட பின் வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியே வந்தார் அப்போது அவர் கல்லூரிக்கு வெளியே சென்னை to பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏறும்போது ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த அரசு பஸ் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது திடீரென மோதியதில் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த பெண் மீது தலையில் லேசாக அடிபட்டது இதை கவனித்த நாகராஜ் உடனடியாக வண்டியிலிருந்து இறங்கி பாதிக்கப்பட்டவரை அழைத்து ஆறுதல் கூறினார் மேலும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஒன்றுதிரண்டு விபத்தை பார்வையிட்டனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.