வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி 103 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1842 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 509 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவல் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் ஆயிரத்தை தாண்டிய கரோனா!