ETV Bharat / state

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி!

வேலூர்: வாணியம்பாடி அருகே கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

author img

By

Published : Oct 3, 2019, 5:14 AM IST

niloper kabil

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஆலங்காயம் பகுதியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு, 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்து சீர்வரிசைகளை வழங்கினார்.

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிலோபர் கபில், ”ஜெயலலிதா 1991ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும். இதற்காக தொட்டில் குழந்தைத் திட்டத்தை கொண்டு வந்தார். சிசுக்கொலை தடைச் சட்டத்தை 1994ஆம் ஆண்டு கொண்டு இயற்றினார். அதன்பிறகுதான் பெண் சிசுக் கொலைகள் தமிழ்நாட்டில் குறைந்தது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”பெண்களின் முன்னேற்றத்திற்காக அதிமுக அரசு தொடர்ந்து கர்ப்பமான பெண்களுக்கு சத்தான தானிய வகைகள், பேரீச்சம் பழம் போன்றவைகளை வழங்கிவருகிறது. ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ்வதற்காக அனைத்து கர்ப்பிணிகளுக்கும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை அரசே ஏற்று நடத்தி வருகிறது” என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஆலங்காயம் பகுதியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு, 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்து சீர்வரிசைகளை வழங்கினார்.

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிலோபர் கபில், ”ஜெயலலிதா 1991ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும். இதற்காக தொட்டில் குழந்தைத் திட்டத்தை கொண்டு வந்தார். சிசுக்கொலை தடைச் சட்டத்தை 1994ஆம் ஆண்டு கொண்டு இயற்றினார். அதன்பிறகுதான் பெண் சிசுக் கொலைகள் தமிழ்நாட்டில் குறைந்தது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”பெண்களின் முன்னேற்றத்திற்காக அதிமுக அரசு தொடர்ந்து கர்ப்பமான பெண்களுக்கு சத்தான தானிய வகைகள், பேரீச்சம் பழம் போன்றவைகளை வழங்கிவருகிறது. ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ்வதற்காக அனைத்து கர்ப்பிணிகளுக்கும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை அரசே ஏற்று நடத்தி வருகிறது” என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Intro:Body:
நாட்டில் பெண் சிசுக் கொலைகள் தடுக்கவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இதுபோன்ற திட்டங்களை கொண்டு வந்தார்
வாணியம்பாடி அருகே நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் நிலோபர் கபில் பேச்சு
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு 300 கர்ப்பிணிபெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்து சீர்வரிசைகளை வழங்கினார்

பின்னர் அவர் பேசுகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முதன் முதலாக கடந்த 1991ஆம் ஆண்டு முதன் முதலாக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகள் குறைவாக காணப்பட்டார்கள் இது சம்பந்தமாக துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டதில் பெண் குழந்தைகள் தாயின் கருவில் இருக்கும்போதே அழிக்கப்படுகின்றன என்பதை அறிந்து அந்த ஆண்டிலேயே தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார் அதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு குழந்தைகள் தத்தெடுப்பு திட்டத்தை கொண்டுவந்து குழந்தைகள் இல்லாத பெற்றோர்களுக்கு தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் மூலம் வளர்க்கப்பட்டு வரும் குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்க ஏதுவாக இருக்கும் வகையிலான திட்டத்தைக் கொண்டு வந்தார் இந்த திட்டத்தின் மூலம் பெண் சதவீதம் அதிகமாவததால் கருவில் இருக்கும் பெண் சிசுவை கொலை செய்யக்கூடாது என பெண் சிசுக்கொலை தடை விதித் சட்டத்தை 1994 ம் ஆண்டு கொண்டு வந்தார் அதன் பிறகு தான் பெண் சிசுக் கொலைகள் குறைந்தது அதையும் மீறி பெண் சிசுக்கொலைகளில் ஈடுபடும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் அல்லது தனிநபராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பது அனைவருக்கும் தெரியும் இதனைத் தொடர்ந்து பெண்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக அதிமுக அரசு தொடர்ந்து கர்ப்பமான பெண்களுக்கு சத்தான தானிய வகைகளையும் பேரீச்சம் பழம் போன்ற பல வகைகளையும் கொடுத்து வருவதை தொடர்ந்து ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ்வதற்காக அணைத்து மத கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை அரசே ஏற்று நடத்தி வருகிறது என்பதை சுட்டிக்காட்டி பேசினார்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.