ETV Bharat / state

நான் உங்கள் மண்ணின் மைந்தன்: அமமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு...!

வேலூர்: நான் உங்கள் மண்ணின் மைந்தன் உங்கள் பகுதியைச் சேர்ந்தவன் என உருக்கமாகப் பேசி அமமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

author img

By

Published : Mar 31, 2019, 9:05 PM IST

அமமுக வேட்பாளர்

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் பார்த்திபன் அவர்களின் அறிமுகக் கூட்டம் கேஜி கண்டிகையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட நகர பேரூர் கழக ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேட்பாளர் பார்த்திபன் அறிமுகப்படுத்தப்பட்ட பின் பேசியதாவது:

தமிழ்நாட்டில் 40 இடங்களிலும் அமமுக அமோக வெற்றி பெறும். அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மற்றும் பாமக வேட்பாளர் ஆகிய இருவருமே வெளியூரைச் சேர்ந்தவர்கள். முன்னதாக வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்ற பின் தொகுதி மக்களை ஒருபோதும் சந்திக்கவில்லை. தொகுதிக்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் செய்யவில்லை பாராளுமன்றத்தில் தொகுதிக்காக எந்த ஒரு கோரிக்கையையும் முறையிடவில்லை என விமர்சித்தார்.

நான் உங்கள் மண்ணின் மைந்தன் உங்கள் பகுதியைச் சேர்ந்தவன் என்னை வெற்றி பெறச் செய்தால் உங்கள் பிரச்சினைகளை எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் சந்தித்து கூறலாம். நான் உங்கள் பகுதிக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் நேரில் சென்று வந்து உங்கள் குறைகளை தீர்ப்பேன் என்று அவர் உறுதி அளித்தார்.


நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் பார்த்திபன் அவர்களின் அறிமுகக் கூட்டம் கேஜி கண்டிகையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட நகர பேரூர் கழக ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேட்பாளர் பார்த்திபன் அறிமுகப்படுத்தப்பட்ட பின் பேசியதாவது:

தமிழ்நாட்டில் 40 இடங்களிலும் அமமுக அமோக வெற்றி பெறும். அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மற்றும் பாமக வேட்பாளர் ஆகிய இருவருமே வெளியூரைச் சேர்ந்தவர்கள். முன்னதாக வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்ற பின் தொகுதி மக்களை ஒருபோதும் சந்திக்கவில்லை. தொகுதிக்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் செய்யவில்லை பாராளுமன்றத்தில் தொகுதிக்காக எந்த ஒரு கோரிக்கையையும் முறையிடவில்லை என விமர்சித்தார்.

நான் உங்கள் மண்ணின் மைந்தன் உங்கள் பகுதியைச் சேர்ந்தவன் என்னை வெற்றி பெறச் செய்தால் உங்கள் பிரச்சினைகளை எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் சந்தித்து கூறலாம். நான் உங்கள் பகுதிக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் நேரில் சென்று வந்து உங்கள் குறைகளை தீர்ப்பேன் என்று அவர் உறுதி அளித்தார்.


Intro:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வருகின்ற 18 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற பாராளமன்ற தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் சார்பாக போட்டியிடும் அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் திரு பார்த்திபன் அவர்களின் அறிமுகக் கூட்டம் கேஜி கண்டிகையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.


Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வருகின்ற 18 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற பாராளமன்ற தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் சார்பாக போட்டியிடும் அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் திரு பார்த்திபன் அவர்களின் அறிமுகக் கூட்டம் கேஜி கண்டிகையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட நகர பேரூர் கழக ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் வேட்பாளர் அறிமுகம் செய்யப்பட்டது இதில் கலந்து கொண்டு பேசிய வேட்பாளர் பார்த்திபன் தமிழகத்தில் உள்ள 40 இடங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமோக வெற்றி பெறும் என உறுதி கூறினார் அதுமட்டுமின்றி அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் திராவிட முன்னேற்ற கட்சி மற்றும் அதிமுக கூட்டணி கட்சியின் பாமக வேட்பாளர்கள் இவர்கள் இருவருமே வெளியூரைச் சேர்ந்தவர்கள் முன்னதாக வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றபோது தொகுதி பக்கம் மக்களை ஒருபோதும் சந்திக்கவில்லை தொகுதிக்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் செய்யவில்லை பாராளமன்றத்தில் தொகுதிக்காக எந்த ஒரு கோரிக்கையையும் முறையிடவில்லை எனவும் கூறினார். நான் உங்கள் மண்ணின் மைந்தன் உங்கள் பகுதியைச் சேர்ந்தவன் என்னை வெற்றி பெறச் செய்தால் உங்கள் பிரச்சினைகளை எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் சந்தித்து உங்கள் குறைகளை கூறலாம் நான் உங்கள் பகுதிக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் நேரில் சென்று வந்து உங்கள் குறைகளை தீர்ப்பேன் என்று அவர் உறுதி அளித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.