ETV Bharat / state

முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!

author img

By

Published : Apr 24, 2019, 7:54 PM IST

வேலுார்: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் செல்வராஜ் வழக்கில், நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

vellore murder

வேலுார் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணு வீரர் செல்வராஜ் என்பவர் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி இரவு சென்னை-பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இவர் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொலை செய்த கும்பலை தேடிவந்தனர்.

இந்த வழக்கில் விஜயராகவபுரத்தைச் சேர்ந்த யுவராஜ் (24), பிரபு (24), நேதாஜி நகரைச் சேர்ந்த கிரிதரன் (21), கணேசன் (20) ஆகிய நான்கு பேரை சத்துவாச்சாரி காவல் துறையினர் இன்று அதிரடியாக கைது செய்தனர். இந்த நான்கு பேரும் வேலூர் பிரபல ரவுடி வீச்சு தினேஷின் கூட்டாளிகள் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கொலை செய்யப்பட்ட செல்வராஜ் தன் காதலி பிரச்னையைத் தொடர்ந்து ஊரில் பல்வேறு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது ரவுடி வீச்சு தினேஷின் கூட்டாளிகளுடன் செல்வராஜுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்தக் கும்பலுடன் சேர்ந்த செல்வராஜ் சில சதி வேலைகளில் ஈடுபட்டுவந்தார். இதற்கிடையில் திடீரென செல்வராஜ் ரவுடி வீச்சு தினேஷுக்கு எதிராக செயல்பட்டு வந்தார்.

வீச்சு தினேஷ் வழக்கு ஒன்றில் பிணை பெற்று மத்திய சிறையிலிருந்து வெளியே வந்தபோது அவர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதற்கு எதிர்தரப்புக்கு செல்வராஜ்தான் திட்டம் வகுத்ததாகக் கூறப்படுகிறது.

எனவே செல்வராஜை கொலை செய்ய தினேஷ் கூட்டாளிகள் முடிவுசெய்து, சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரை கொலை செய்ய முயற்சித்தனர்.

பின்னர் சம்பவம் நடந்த அன்று நான்கு பேரும் கையில் கத்தி மற்றும் இரும்பு ராடைக் கொண்டு செல்வராஜை சரமாரியாக தாக்கி ஓட ஓட வெட்டிக் கொன்றுள்ளனர்.

பின்னர் காவல் துறையினருக்குப் பயந்து தலைமறைவாக இருந்து, தனது வழக்கறிஞர்கள் மூலம் சரணடையவும் முயற்சி செய்தனர். இந்தச் சூழலில் இன்று எங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அந்த நான்கு பேரையும் கைது செய்தோம்.

இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்தனர்.

வேலுார் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணு வீரர் செல்வராஜ் என்பவர் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி இரவு சென்னை-பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இவர் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொலை செய்த கும்பலை தேடிவந்தனர்.

இந்த வழக்கில் விஜயராகவபுரத்தைச் சேர்ந்த யுவராஜ் (24), பிரபு (24), நேதாஜி நகரைச் சேர்ந்த கிரிதரன் (21), கணேசன் (20) ஆகிய நான்கு பேரை சத்துவாச்சாரி காவல் துறையினர் இன்று அதிரடியாக கைது செய்தனர். இந்த நான்கு பேரும் வேலூர் பிரபல ரவுடி வீச்சு தினேஷின் கூட்டாளிகள் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கொலை செய்யப்பட்ட செல்வராஜ் தன் காதலி பிரச்னையைத் தொடர்ந்து ஊரில் பல்வேறு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது ரவுடி வீச்சு தினேஷின் கூட்டாளிகளுடன் செல்வராஜுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்தக் கும்பலுடன் சேர்ந்த செல்வராஜ் சில சதி வேலைகளில் ஈடுபட்டுவந்தார். இதற்கிடையில் திடீரென செல்வராஜ் ரவுடி வீச்சு தினேஷுக்கு எதிராக செயல்பட்டு வந்தார்.

வீச்சு தினேஷ் வழக்கு ஒன்றில் பிணை பெற்று மத்திய சிறையிலிருந்து வெளியே வந்தபோது அவர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதற்கு எதிர்தரப்புக்கு செல்வராஜ்தான் திட்டம் வகுத்ததாகக் கூறப்படுகிறது.

எனவே செல்வராஜை கொலை செய்ய தினேஷ் கூட்டாளிகள் முடிவுசெய்து, சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரை கொலை செய்ய முயற்சித்தனர்.

பின்னர் சம்பவம் நடந்த அன்று நான்கு பேரும் கையில் கத்தி மற்றும் இரும்பு ராடைக் கொண்டு செல்வராஜை சரமாரியாக தாக்கி ஓட ஓட வெட்டிக் கொன்றுள்ளனர்.

பின்னர் காவல் துறையினருக்குப் பயந்து தலைமறைவாக இருந்து, தனது வழக்கறிஞர்கள் மூலம் சரணடையவும் முயற்சி செய்தனர். இந்தச் சூழலில் இன்று எங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அந்த நான்கு பேரையும் கைது செய்தோம்.

இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்தனர்.

Intro:வேலூரில் முன்னாள் ராணுவ வீரர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில்

பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 4 பேர் கைது

சத்துவாச்சாரி போலீசார் நடவடிக்கை


Body:வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் கடந்த 20 ஆம் தேதி இரவு சென்னையில் டி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மர்மநபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட செல்வராஜ் மீது ஏற்கனவே ஊர் கோயில் தேரை எரித்த வழக்கு தன் காதலி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு போட முயற்சி செய்த வழக்கு தனது மாமனாரை கொலை செய்த வழக்கு என மூன்று வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்தது மேலும் செல்வராஜ் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார் காதல் பிரச்சினை காரணமாக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்தது இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்த மர்ம நபர்களை தேடி வந்தனர் இந்த நிலையில் இந்த வழக்கில் சத்துவாச்சாரி விஜயராகவபுரத்தை சேர்ந்த யுவராஜ்(24) பிரபு(24) நேதாஜி நகரைச் சேர்ந்த கிரிதரன்(21) கணேசன் (20) ஆகிய 4 பேரை சத்துவாச்சாரி போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர் இந்த நிலையில், இந்த 4 பேரும் வேலூரில் பிரபல ரவுடி வீச்சு தினேஷ் கூட்டாளிகள் என்பது தெரியவந்துள்ளது இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;

கொலை செய்யப்பட்ட செல்வராஜ் தன் காதலி பிரச்சினையைத் தொடர்ந்து ஊரில் பல தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் அப்போது ரவுடி வீச்சு தினேஷ் ஆட்களுடன் செல்வராஜுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது இதையடுத்து அந்த கும்பலுடன் சேர்ந்து செல்வராஜ் சில சதி வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் இதற்கிடையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரும் மற்றொரு ரவுடியான வசூர் ராஜாவின் கூட்டாளி பிச்சை பெருமாளை கொலை செய்த வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளிவந்தனர். இந்த சூழலில் செல்வராஜ் திடீரென வீச்சு தினேசுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளார் அதாவது சில மாதங்களுக்கு முன் வீச்சு தினேஷ் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்று வேலூர் மத்திய சிறையில் இருந்து வெளியே வரும்போது இந்த குண்டு வீசப்பட்டது. அப்போது எதிர்த் தரப்புக்கு செல்வராஜ் தான் திட்டம் வகுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே செல்வராஜை தீர்த்துக்கட்ட வீச்சு தினேஷ் கூட்டாளிகள் முடிவு செய்தனர் அதன்படி சம்பவம் நடந்த இரண்டு நாளுக்கு முன்பே செல்வராஜை கொலை செய்ய முயற்சி செய்தனர் பின்னர் சம்பவம் நடந்த 20 ஆம் தேதியன்று 4 பேரும் கையில் கத்தி மற்றும் இரும்பு ராடை கொண்டு செல்வராஜை சரமாரியாக தாக்கி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றுள்ளனர். பின்னர் போலீசுக்கு பயந்து 4 பேரும் தலைமறைவாக இருந்தனர் தனது வக்கீல்கள் மூலம் சரணடையவும் முயற்சி செய்துள்ளனர் இந்த சூழலில் இன்று எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த நான்கு பேரையும் கைது செய்தோம் இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்


Conclusion:4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.