ETV Bharat / state

திருச்சி ஆவின் பால் பண்ணையில் பாய்லர் வெடித்து இளைஞா் பலி

author img

By

Published : Mar 3, 2022, 12:55 PM IST

திருச்சி ஆவின் பால் பண்ணையில் பாய்லர் வெடித்ததில் இளைஞா் பலியானார்.

திருச்சி ஆவின் பால் பண்ணையில் பாய்லர் வெடித்து இளைஞா் பலி
திருச்சி ஆவின் பால் பண்ணையில் பாய்லர் வெடித்து இளைஞா் பலி

திருச்சி கொட்டப்பட்டில் தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வாயிலாகத் திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்ட விவசாயிகளிடமிருந்து நாளொன்றுக்கு 4 லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தினசரி விற்பனையாக 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் 24 ஆம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் அங்கிருந்த பாய்லர் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்த ஆயில் குழாய் அதீத வெப்பம் காரணமாக வெடித்து சிதறி கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த துறையூரை சேர்ந்த ருத்ரேஸ்வரன் என்ற ஒப்பந்த ஊழியர் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து கே.கே நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி புத்தூர் 4 ரோடு பகுதியில் உள்ள (கீதாஞ்சலி) தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்கு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருச்சி ஆவின் பால் பண்ணையில் பாய்லர் வெடித்து இளைஞா் பலி
திருச்சி ஆவின் பால் பண்ணையில் பாய்லர் வெடித்து இளைஞா் பலி

இந்நிலையில் ஆவின் பாய்லர் வெடித்ததற்குக் காரணம் ஆவின் நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் தான் வெடித்தது என்று கூறி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி காப்பீடு தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றதோடு ருத்ரேஸ்வரனின் உடலையும் உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

உறவினர்கள் போராட்டம்
உறவினர்கள் போராட்டம்

இதையும் படிங்க: 13 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர்கள் கைது

திருச்சி கொட்டப்பட்டில் தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வாயிலாகத் திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்ட விவசாயிகளிடமிருந்து நாளொன்றுக்கு 4 லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தினசரி விற்பனையாக 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் 24 ஆம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் அங்கிருந்த பாய்லர் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்த ஆயில் குழாய் அதீத வெப்பம் காரணமாக வெடித்து சிதறி கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த துறையூரை சேர்ந்த ருத்ரேஸ்வரன் என்ற ஒப்பந்த ஊழியர் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து கே.கே நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி புத்தூர் 4 ரோடு பகுதியில் உள்ள (கீதாஞ்சலி) தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்கு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருச்சி ஆவின் பால் பண்ணையில் பாய்லர் வெடித்து இளைஞா் பலி
திருச்சி ஆவின் பால் பண்ணையில் பாய்லர் வெடித்து இளைஞா் பலி

இந்நிலையில் ஆவின் பாய்லர் வெடித்ததற்குக் காரணம் ஆவின் நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் தான் வெடித்தது என்று கூறி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி காப்பீடு தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றதோடு ருத்ரேஸ்வரனின் உடலையும் உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

உறவினர்கள் போராட்டம்
உறவினர்கள் போராட்டம்

இதையும் படிங்க: 13 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர்கள் கைது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.