ETV Bharat / state

மூன்றாவது மொழியாக விருப்ப மொழிதான் இருக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

திருச்சி: தமிழ்,ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக மாணவர் விருப்பப்படி எந்த மொழியையும் படிக்கலாம் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

author img

By

Published : Sep 18, 2019, 3:59 PM IST

vasan press meet in trichy

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் நமது கலாசசாரம். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தனிச்சிறப்பு உள்ளது. அதுபோல தமிழ்மொழிக்கும் சிறப்புகள் உள்ளன. எந்த ஒரு மொழியையும் விருப்பத்திற்கு எதிராக திணிக்கவும், கட்டாயப்படுத்தவும் முடியாது.

அப்படி மொழி விருப்பத்திற்கு மாறாக திணிக்கப்பட்டால் மக்களும் ஏற்க மாட்டார்கள். முதல் மொழியாக தாய்மொழியும், இரண்டாவது மொழியாக ஆங்கிலமும், மூன்றாவது மொழியாக விருப்பத்தின் அடிப்படையில் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம். பிளக்ஸ் போர்டுகள், கட்அவுட், பேனர்கள், போஸ்டர்கள் என எதுவானாலும் அரசியல் நிகழ்ச்சிக்கோ அல்லது தனியார் நிகழ்ச்சிக்கோ வைக்கக் கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஜி.கே.வாசன் பேட்டி

அரசு அனுமதி வழங்கும் இடங்களில் உரிய கட்டணத்தை செலுத்தி அங்கு 100 விழுக்காடு பாதுகாப்புடன் இவற்றை வைக்கலாம். பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கக்கூடாது. 100 விழுக்காடு பேனர் கலாசசரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்தால் அதையும் ஏற்றுக் கொள்வோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

இந்தியா வளர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்- ஜி.கே வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் நமது கலாசசாரம். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தனிச்சிறப்பு உள்ளது. அதுபோல தமிழ்மொழிக்கும் சிறப்புகள் உள்ளன. எந்த ஒரு மொழியையும் விருப்பத்திற்கு எதிராக திணிக்கவும், கட்டாயப்படுத்தவும் முடியாது.

அப்படி மொழி விருப்பத்திற்கு மாறாக திணிக்கப்பட்டால் மக்களும் ஏற்க மாட்டார்கள். முதல் மொழியாக தாய்மொழியும், இரண்டாவது மொழியாக ஆங்கிலமும், மூன்றாவது மொழியாக விருப்பத்தின் அடிப்படையில் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம். பிளக்ஸ் போர்டுகள், கட்அவுட், பேனர்கள், போஸ்டர்கள் என எதுவானாலும் அரசியல் நிகழ்ச்சிக்கோ அல்லது தனியார் நிகழ்ச்சிக்கோ வைக்கக் கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஜி.கே.வாசன் பேட்டி

அரசு அனுமதி வழங்கும் இடங்களில் உரிய கட்டணத்தை செலுத்தி அங்கு 100 விழுக்காடு பாதுகாப்புடன் இவற்றை வைக்கலாம். பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கக்கூடாது. 100 விழுக்காடு பேனர் கலாசசரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்தால் அதையும் ஏற்றுக் கொள்வோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

இந்தியா வளர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்- ஜி.கே வாசன்

Intro:தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.


Body:திருச்சி: மூன்றாவது மொழியாக விருப்பத்தின் அடிப்படையில் இந்திய கற்பதில் தவறில்லை என்று ஜிகே வாசன் கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது கலாச்சாரம். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தனிச்சிறப்பு உள்ளது. எந்த ஒரு மொழியையும் விருப்பத்திற்கு எதிராக திணிக்கவும், கட்டாயப்படுத்தவும் முடியாது. தமிழகத்திலும் இந்தியை திணிப்பதும், கட்டாயப்படுத்தவும் முடியாது. தமிழக அரசும் இதை அனுமதிக்காது. மக்களும் ஏற்க மாட்டார்கள்.
முதல் மொழியாக தாய்மொழியும், இரண்டாவது மொழியாக ஆங்கிலமும், மூன்றாவது மொழியாக விருப்பத்தின் அடிப்படையில் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம். இதில் இந்தி மொழியும் ஒன்று. வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத வட்டியிலான நகை கடன் திட்டத்தை நிறுத்தம் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நகை கடன் திட்டம் தொடர்ந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும். மேட்டூர் அணை 43 வது முறையாக நிரம்பி உள்ளது. எனினும் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலந்துள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். காவிரி ஆற்றில் 100 தடுப்பணைகள் கட்ட வேண்டும். கோதாவரி-காவேரி நதிகளை இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். "காவேரி கூக்குரல்" என்ற பெயரில் சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்தும் நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி பங்கு பெறுகிறது.
டெல்டா மாவட்டங்களில் சாகுபடி மும்மரமாக நடைபெறுவதால் அதற்கு தேவையான உரம், விதை உள்ளிட்டவற் அனைத்து தேவைகளையும் தங்கு தடையின்றி கிடைக்க தமிழக அரசு செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளக்ஸ் போர்டுகள், கட்அவுட், பேனர்கள், போஸ்டர்கள் என எதுவானாலும் அரசியல் நிகழ்ச்சிக்கோ அல்லது தனியார் நிகழ்ச்சிக்கோ வைக்கக் கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அரசு அனுமதி வழங்கும் இடங்களில் உரிய கட்டணத்தை செலுத்தி அங்கு 100 சதவீத பாதுகாப்புடன் இவற்றை வைக்கலாம். பொதுமக்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது. எனினும் இதை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருப்பதால் இந்த கருத்தை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. 100 சதவீதம் பேனர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்தால் அதையும் ஏற்றுக் கொள்வோம். கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம் உள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். ஆகவே மத்திய அரசு மக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் பெட்ரோல் டீசல் விலை உயராமல் கட்டுக்குள் வைக்கவேண்டும்.
கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கண்டெய்னர் லாரி உரிமையாளர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். மின்சார வாகனங்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது. அதேபோல் உற்பத்தி முதலீடுகளுக்கு மூலதன மானியம் வழங்குவதும் நல்ல விஷயம். 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைப்பதன் மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை முறையாக இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்திலும், மாணவர்களின் நலன் கண்ணோட்டத்திலும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு கண்ணோட்டத்தில் மாணவர்களுக்கு தேர்வு குறித்த அச்சம் ஏற்படும் என்ற கண்ணோட்டமும் உள்ளது. எனினும் தமிழக அரசு இவ்விஷயத்தில் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கதாகும். இதில் மூன்று ஆண்டுகள் விதிவிலக்கு அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவு சரியானதே என்றார்.



Conclusion:மின்சார வாகனங்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று ஜிகே வாசன் கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.