ETV Bharat / state

ஆம்னி வேன் விபத்து: இரண்டு பேர் உயிரிழப்பு

author img

By

Published : Feb 7, 2020, 5:06 PM IST

திருச்சி : முசிறி அருகே ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்ததில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி அருகே வேன் மரத்தில் மோதித் தீப்பற்றி விபத்து
திருச்சி அருகே வேன் மரத்தில் மோதித் தீப்பற்றி விபத்து

ஈரோடு மாவட்டம் கொளப்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவர் தனது மனைவி லோகநாயகி, மகன் யுவதீஷ், மாமனார் ஆறுமுகம், மாமியார் செல்லம்மாள், உறவினர் விஸ்வநாதன் ஆகியோருடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு சென்றுள்ளார். கோயில் வழிபாடுகளை முடித்துவிட்டு மீண்டும் இன்று அதிகாலை திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள திருஈங்கோய்மலை என்ற இடத்தில் காரில் இவர்கள் அனைவரும் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநர் மணிகண்டனின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன், சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து மரத்தில் மோதியது.

திருச்சி அருகே வேன் மரத்தில் மோதித் தீப்பற்றி விபத்து

வேன் மரத்தில் மோதியதைத் தொடர்ந்து ஆம்னி வேனில் தீப்பற்றியதில் ஓட்டுநர் மணிகண்டன், மயில்சாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆம்னி வேனில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மற்ற ஐந்து பேரையும் அவ்வழியே சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் காரை இயக்கி விபத்து - சி.சி.டி.வி காணொலி வெளியீடு

ஈரோடு மாவட்டம் கொளப்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவர் தனது மனைவி லோகநாயகி, மகன் யுவதீஷ், மாமனார் ஆறுமுகம், மாமியார் செல்லம்மாள், உறவினர் விஸ்வநாதன் ஆகியோருடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு சென்றுள்ளார். கோயில் வழிபாடுகளை முடித்துவிட்டு மீண்டும் இன்று அதிகாலை திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள திருஈங்கோய்மலை என்ற இடத்தில் காரில் இவர்கள் அனைவரும் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநர் மணிகண்டனின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன், சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து மரத்தில் மோதியது.

திருச்சி அருகே வேன் மரத்தில் மோதித் தீப்பற்றி விபத்து

வேன் மரத்தில் மோதியதைத் தொடர்ந்து ஆம்னி வேனில் தீப்பற்றியதில் ஓட்டுநர் மணிகண்டன், மயில்சாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆம்னி வேனில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மற்ற ஐந்து பேரையும் அவ்வழியே சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் காரை இயக்கி விபத்து - சி.சி.டி.வி காணொலி வெளியீடு

Intro:திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்ததில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.Body:திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்ததில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் கொளப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் மயில்சாமி. இவர் தனது மனைவி லோகநாயகி, மகன் யுவதீஷ், மாமனார் ஆறுமுகம், மாமியார் செல்லம்மாள் ,
உறவினர் விஸ்வநாதன் ஆகியோருடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவில் வழிபாடுகளை முடித்து விட்டு மீண்டும் இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள திருஈங்கோய்மலை என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் மணிகண்டன் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து, விழுந்து உருண்டு மரத்தில் மோதியது.
இதில் ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது. டிரைவர் மணிகண்டன், மயில்சாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.
மேலும் ஆம்னி வேனில் இருந்தவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டனர். படுகாயமடைந்த 5 பேரையும் முசிறி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தினால் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.