ETV Bharat / state

துரை வைகோவிற்கு முடிசூட்டு விழா?

author img

By

Published : Mar 7, 2022, 10:19 PM IST

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு இயக்கத்தை புத்துயிரோடு வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இப்போது. இந்நிலையில் நாளை மறுநாள் (மார்ச் 9) நடைபெறும் கூட்டத்தில் துரை.பாலகிருஷ்ணன் வகித்த பதவியை துரை வைகோவிற்கு வழங்க இருப்பதாக பேசப்படுகிறது.

துரை.வைகோவிற்கு முடிசூட்டு விழா
துரை.வைகோவிற்கு முடிசூட்டு விழா

திருச்சி: திருப்புமுனை ஆரம்பமாகிறது மறுமலர்ச்சியில் தொண்டர்கள் இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள், 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி வைகோவை கட்சியிலிருந்து நீக்குவதாகத் திமுக செயற்குழு முடிவெடுத்தது.

அடுத்த நாளே, "நாங்கள்தான் உண்மையான திமுக. கறுப்பு சிவப்புக் கொடியும், உதயசூரியன் சின்னமும், அண்ணா அறிவாலயமும் எங்களுக்கே சொந்தம்" என்று உரிமை கொண்டாடினார் வைகோ. அவருக்கு தற்பொழுது 78 வயதாகிறது. இருப்பினும், அவருக்கு இயக்கத்தை புத்துயிரோடு வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இப்போது.

மீண்டும் வரலாறு திரும்பப் போகிறது. "நாங்கள்தான் உண்மையான மதிமுக. சிவப்பு கறுப்பு சிவப்பு கொடியும், தாயகமும் எங்களுக்கே சொந்தம்" என்று உரிமை கொண்டாடக் காத்திருக்கிறார்கள் மதிமுகவின் மூத்த நிர்வாகிகள். சிலர் அதுவும் கொங்கு மண்டலத்தில் இருந்து இப்படி கொம்பு சீவி விட்டதால் ஒரு குரல் ஓங்கி ஒலிக்கப்போகிறது என்கிறார்கள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

என்ன பிரச்னை?

தமிழ்நாடு வரலாற்றிலேயே, கட்சியில் இருப்பவர்களைவிட விலகியவர்களே அதிகம் என்ற தனிப்பெருமை கொண்ட இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். அதில் சிலரை மட்டும்தான் திமுக இழுத்தது. மற்றவர்கள் எல்லாம் வைகோவின் போர்ப்படை தளபதிகளாக இன்றுவரை அவருடனேயே வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். வைகோவின் கட்டுக்கடங்காத கோபம் ஊரறிந்த ரகசியம், அத்தோடு தவறான முடிவுகளாலும் சிலரை வழியனுப்பிவைத்தார் என்பதே வரலாறு.

இன்றைய பிரச்னைக்குக் காரணம், துரை வைகோவின் கையில் கட்சியைக் கொடுக்கும் அவரது முடிவு. கருணாநிதியின் வாரிசு அரசியலை எதிர்த்துக் கட்சியைவிட்டே வெளியேறியவர், இன்று அதே தவறை செய்கிறபோது எப்படிச் சகித்துக்கொள்ள முடியும் என்று கேட்கிறார்கள், மூத்த மதிமுக நிர்வாகிகள். குறிப்பாக கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, சட்டத்துறை செயலாளர் தேவதாஸ், ஆட்சி மன்றக்குழு செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் போன்ற இன்னும் சிலர்.

அதேபோல், அரசியல் ஆலோசனை குழு செயலாளர் புலவர் செவ்வந்தியப்பன், கொள்கை பரப்புச் செயலாளர் அழகு சுந்தரம், முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை மருத்துவர் சந்திரசேகரன், ஒரே அணியாகச் செயல்படுகிறார்கள் என்கிறார்கள். இவர்கள் எடுக்கிற முடிவைத்தான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வைத்து, அவர்களின் ஒப்புதலுடன் தீர்மானமாக நிறைவேற்ற முடியும் என்று மதிமுகவின் சட்டதிட்ட விதி சொல்கிறது. ஆனால், துரை வைகோ நியமனம் தொடர்பாக இவர்களிடம் வைகோ முன்கூட்டியே கருத்துக் கேட்கவும் இல்லை என்கிறார்கள்.

முக்கிய நிர்வாகிகள் கூட்டம் மார்ச் 9

நாளை மறுநாள் தாயகத்தில் உயர் நிலைக்குழு உறுப்பினர்கள், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள், தலைமை கழகச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் துரை வைகோ மதிமுகவின் துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகிறது.

காலியாக உள்ள துணை பொதுச்செயலாளர் பதவி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்துக்குட்பட்ட வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை.பாலகிருஷ்ணன். மதிமுக தொடங்கப்பட்ட நாள் முதல் படிப்படியாக வளர்ந்து மதிமுகவின் துணை பொதுச்செயலாளராக பொறுப்பில் இருந்தார். கடந்த ஆண்டு கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

துரை. பாலகிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "மதிமுக துணை பொதுச்செயலாளர், ஆருயிர்ச்சகோதரர் துரை.பாலகிருஷ்ணன், உடல் நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி அறிந்து பேரிடியாய் என் தலையில் விழுந்தது. உடைந்து நொறுங்கிப் போனேன். 27 ஆண்டுகளாக, எந்த சபலத்திற்கும், சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்காமல், மதிமுகவை உயிருக்கும் மேலாக நேசித்துப் பணியாற்றி வந்தார். எத்தனையோ சோதனைகளில், நெருக்கடியான காலகட்டங்களில் எனக்கு உறுதுணையாகப் பக்கபலமாக இருந்தார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் துரை.பாலகிருஷ்ணன் வகித்த பதவியை துரை வைகோவிற்கு வழங்க இருப்பதாக பேசப்படுகிறது. வைகோவிற்கு பக்கபலமாக யார் யார் இருக்கப்போகிறார்கள் என்பது மார்ச் 9ஆம் தேதி தெரிந்துவிடும்.

இதையும் படிங்க: மதுபான விலை இன்று முதல் உயர்வு

திருச்சி: திருப்புமுனை ஆரம்பமாகிறது மறுமலர்ச்சியில் தொண்டர்கள் இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள், 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி வைகோவை கட்சியிலிருந்து நீக்குவதாகத் திமுக செயற்குழு முடிவெடுத்தது.

அடுத்த நாளே, "நாங்கள்தான் உண்மையான திமுக. கறுப்பு சிவப்புக் கொடியும், உதயசூரியன் சின்னமும், அண்ணா அறிவாலயமும் எங்களுக்கே சொந்தம்" என்று உரிமை கொண்டாடினார் வைகோ. அவருக்கு தற்பொழுது 78 வயதாகிறது. இருப்பினும், அவருக்கு இயக்கத்தை புத்துயிரோடு வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இப்போது.

மீண்டும் வரலாறு திரும்பப் போகிறது. "நாங்கள்தான் உண்மையான மதிமுக. சிவப்பு கறுப்பு சிவப்பு கொடியும், தாயகமும் எங்களுக்கே சொந்தம்" என்று உரிமை கொண்டாடக் காத்திருக்கிறார்கள் மதிமுகவின் மூத்த நிர்வாகிகள். சிலர் அதுவும் கொங்கு மண்டலத்தில் இருந்து இப்படி கொம்பு சீவி விட்டதால் ஒரு குரல் ஓங்கி ஒலிக்கப்போகிறது என்கிறார்கள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

என்ன பிரச்னை?

தமிழ்நாடு வரலாற்றிலேயே, கட்சியில் இருப்பவர்களைவிட விலகியவர்களே அதிகம் என்ற தனிப்பெருமை கொண்ட இயக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். அதில் சிலரை மட்டும்தான் திமுக இழுத்தது. மற்றவர்கள் எல்லாம் வைகோவின் போர்ப்படை தளபதிகளாக இன்றுவரை அவருடனேயே வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். வைகோவின் கட்டுக்கடங்காத கோபம் ஊரறிந்த ரகசியம், அத்தோடு தவறான முடிவுகளாலும் சிலரை வழியனுப்பிவைத்தார் என்பதே வரலாறு.

இன்றைய பிரச்னைக்குக் காரணம், துரை வைகோவின் கையில் கட்சியைக் கொடுக்கும் அவரது முடிவு. கருணாநிதியின் வாரிசு அரசியலை எதிர்த்துக் கட்சியைவிட்டே வெளியேறியவர், இன்று அதே தவறை செய்கிறபோது எப்படிச் சகித்துக்கொள்ள முடியும் என்று கேட்கிறார்கள், மூத்த மதிமுக நிர்வாகிகள். குறிப்பாக கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, சட்டத்துறை செயலாளர் தேவதாஸ், ஆட்சி மன்றக்குழு செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் போன்ற இன்னும் சிலர்.

அதேபோல், அரசியல் ஆலோசனை குழு செயலாளர் புலவர் செவ்வந்தியப்பன், கொள்கை பரப்புச் செயலாளர் அழகு சுந்தரம், முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை மருத்துவர் சந்திரசேகரன், ஒரே அணியாகச் செயல்படுகிறார்கள் என்கிறார்கள். இவர்கள் எடுக்கிற முடிவைத்தான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வைத்து, அவர்களின் ஒப்புதலுடன் தீர்மானமாக நிறைவேற்ற முடியும் என்று மதிமுகவின் சட்டதிட்ட விதி சொல்கிறது. ஆனால், துரை வைகோ நியமனம் தொடர்பாக இவர்களிடம் வைகோ முன்கூட்டியே கருத்துக் கேட்கவும் இல்லை என்கிறார்கள்.

முக்கிய நிர்வாகிகள் கூட்டம் மார்ச் 9

நாளை மறுநாள் தாயகத்தில் உயர் நிலைக்குழு உறுப்பினர்கள், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள், தலைமை கழகச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் துரை வைகோ மதிமுகவின் துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகிறது.

காலியாக உள்ள துணை பொதுச்செயலாளர் பதவி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்துக்குட்பட்ட வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை.பாலகிருஷ்ணன். மதிமுக தொடங்கப்பட்ட நாள் முதல் படிப்படியாக வளர்ந்து மதிமுகவின் துணை பொதுச்செயலாளராக பொறுப்பில் இருந்தார். கடந்த ஆண்டு கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

துரை. பாலகிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "மதிமுக துணை பொதுச்செயலாளர், ஆருயிர்ச்சகோதரர் துரை.பாலகிருஷ்ணன், உடல் நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி அறிந்து பேரிடியாய் என் தலையில் விழுந்தது. உடைந்து நொறுங்கிப் போனேன். 27 ஆண்டுகளாக, எந்த சபலத்திற்கும், சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்காமல், மதிமுகவை உயிருக்கும் மேலாக நேசித்துப் பணியாற்றி வந்தார். எத்தனையோ சோதனைகளில், நெருக்கடியான காலகட்டங்களில் எனக்கு உறுதுணையாகப் பக்கபலமாக இருந்தார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் துரை.பாலகிருஷ்ணன் வகித்த பதவியை துரை வைகோவிற்கு வழங்க இருப்பதாக பேசப்படுகிறது. வைகோவிற்கு பக்கபலமாக யார் யார் இருக்கப்போகிறார்கள் என்பது மார்ச் 9ஆம் தேதி தெரிந்துவிடும்.

இதையும் படிங்க: மதுபான விலை இன்று முதல் உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.