ETV Bharat / state

அமெரிக்கா-இந்திய அரசியலமைப்புச் சட்ட ஒப்பீடு போட்டி: 4பேர் வெற்றி - trichy

திருச்சி: தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடந்த அமெரிக்க-இந்திய அரசியலமைப்பு ஒப்பீடு விவாத நிகழ்ச்சியில் நான்கு பேர் வெற்றிபெற்றனர்.

usa-vs-india-constitution-debate
author img

By

Published : Aug 9, 2019, 11:41 PM IST

இந்திய - அமெரிக்க அரசியலமைப்புச் சட்ட ஒப்பீடு விவாதப்போட்டி திருச்சியில் உள்ள தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 73 மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தைச் சேர்ந்த மாணவர் பாலா, சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் ஜமுனா, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேவ்திப்ஸா தாஸ் ஆகிய 4 பேர் வெற்றி பெற்றனர்.

சட்ட ஒப்பீடு விவாதப்போட்டி

இவர்கள் செப்டம்பர் 14ஆம் தேதி சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்றனர். முன்னதாக இப்போட்டி கொச்சி,பெங்களூரு ஆகிய இரு நகரங்களில் நடத்தப்பட்டது. இந்த விவாத நிகழ்ச்சியின் மூலம் இரு நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்கள் குறித்து மாணவர்கள் புரிந்துகொள்ள முடியும். விமர்சனப் பார்வையில் அணுக வழிவகுக்கும். பொது மக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், சொத்துரிமை குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில் இந்த விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய - அமெரிக்க அரசியலமைப்புச் சட்ட ஒப்பீடு விவாதப்போட்டி திருச்சியில் உள்ள தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 73 மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தைச் சேர்ந்த மாணவர் பாலா, சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் ஜமுனா, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேவ்திப்ஸா தாஸ் ஆகிய 4 பேர் வெற்றி பெற்றனர்.

சட்ட ஒப்பீடு விவாதப்போட்டி

இவர்கள் செப்டம்பர் 14ஆம் தேதி சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்றனர். முன்னதாக இப்போட்டி கொச்சி,பெங்களூரு ஆகிய இரு நகரங்களில் நடத்தப்பட்டது. இந்த விவாத நிகழ்ச்சியின் மூலம் இரு நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்கள் குறித்து மாணவர்கள் புரிந்துகொள்ள முடியும். விமர்சனப் பார்வையில் அணுக வழிவகுக்கும். பொது மக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், சொத்துரிமை குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில் இந்த விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Intro:அமெரிக்கா-இந்திய அரசியலமைப்புச் ஒப்பீடு விவாத போட்டி நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடந்தது.


Body:திருச்சி: திருச்சியில் நடந்த இந்திய அமெரிக்க அரசியலமைப்புச் சட்ட ஒப்பீடு போட்டியில் 4 மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர்.
அமெரிக்கா இந்தியா அரசியலமைப்பு சட்ட ஒப்பீடு விவாத அரங்கம் திருச்சி அருகே நவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்தது.
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் மற்றும் சென்னை லயோலா கல்லூரி சார்பில் அமெரிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டங்கள் ஒரு ஒப்பீடு குறித்த விவாத போட்டி நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சி அருகே நவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 73 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிக்கு நடுவர்களாக ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி, சென்னை உயர்நீதிமன்ற அட்டார்னி கீதா ரமேஷன், சென்னை அமெரிக்க தூதரக கலாச்சார விவகார அலுவலர் மௌலிக் பெர்கானா, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜா நங்கவரம் உள்ளிட்டோர் செயல்பட்டனர்.
இந்த போட்டியில் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த மாணவர் பாலா, சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் ஜூமுனா, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தேவ்திப்தா தாஸ் ஆகிய 4 பேர் வெற்றி பெற்றனர்.
இவர்கள் சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக இந்த போட்டி கொச்சி, பெங்களூரு ஆகிய 2 நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது. 3வது நகரமாக தற்போது திருச்சியில் நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகரத்தில் இருந்தும் தலா 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 26ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதிப்போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் ஒரு மாணவருக்கு கோப்பையும், சான்றிதழும் வழங்கப்படும். இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது/ இந்த விவாத நிகழ்ச்சியின் மூலம் இரு நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டங்கள் குறித்து மாணவர்கள் புரிந்துகொள்ள முடியும். விமர்சனப் பார்வையில் அணுக வழிவகுக்கும். பொது மக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், சொத்துரிமை குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில் இந்த விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Conclusion:இறுதிப்போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.