ETV Bharat / state

உலக யோகா தினம்: திருச்சியில் 2 உலக சாதனைகள் - உலக சாதனைகள்

திருச்சி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருச்சியில் இரண்டு உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.

yoga
author img

By

Published : Jun 21, 2019, 10:47 PM IST

சர்வதேச யோகா தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த வகையில் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, பெரம்பலூரைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் இளையராஜா இரண்டு மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதிய உலக சாதனை படைத்தார். இவருக்கு பதஞ்சலி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை புரிந்தமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருச்சியில் 2 உலக சாதனைகள்

இதேபோல், திருச்சி உய்யகொண்டான் திருமலை மவுண்ட் லிட்ரா ஜி பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்திய வரைபடத்தில் நின்று யோகா செய்து புதிய சாதனை படைத்துள்ளனர். இந்திய வரைபடத்தில் அமர்ந்து பத்மாசனம், பத்ம மயில் ஆசனம், வஜ்ராசனம், சித்தாசனம், கோமுகாசனம் உள்ளிட்ட 20 ஆசனங்களை 21 நிமிடத்தில் செய்து முடித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் சௌடாம்பிகா கல்வி குழுமத் தலைவர் ராமமூர்த்தி, பாஜக மாநில துணைத்தலைவர் காந்தி, ருத்ர சாந்தி யோகாலயா கிருஷ்ணகுமார், பதஞ்சலி உலக சாதனை புத்தகத்தின் முதன்மை நடுவர் அசோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சர்வதேச யோகா தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த வகையில் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, பெரம்பலூரைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் இளையராஜா இரண்டு மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதிய உலக சாதனை படைத்தார். இவருக்கு பதஞ்சலி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை புரிந்தமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருச்சியில் 2 உலக சாதனைகள்

இதேபோல், திருச்சி உய்யகொண்டான் திருமலை மவுண்ட் லிட்ரா ஜி பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்திய வரைபடத்தில் நின்று யோகா செய்து புதிய சாதனை படைத்துள்ளனர். இந்திய வரைபடத்தில் அமர்ந்து பத்மாசனம், பத்ம மயில் ஆசனம், வஜ்ராசனம், சித்தாசனம், கோமுகாசனம் உள்ளிட்ட 20 ஆசனங்களை 21 நிமிடத்தில் செய்து முடித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் சௌடாம்பிகா கல்வி குழுமத் தலைவர் ராமமூர்த்தி, பாஜக மாநில துணைத்தலைவர் காந்தி, ருத்ர சாந்தி யோகாலயா கிருஷ்ணகுமார், பதஞ்சலி உலக சாதனை புத்தகத்தின் முதன்மை நடுவர் அசோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Intro:உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று திருச்சியில் 2 உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது


Body:திருச்சி:
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று திருச்சியில் 2 உலக சாதனைகள் புதிதாக படைக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு. சர்வதேச யோகா தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த வகையில் தமிழகத்தில் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சி இன்று காலை 6.30 மணி முதல் நடந்தது. இதைத்தொடர்ந்து
பெரம்பலூரை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் இளையராஜா 2 மணி நேரம் தண்ணீரில் மிதந்து புதிய உலக சாதனை படைத்தார்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு திருச்சி சங்கம் ஹோட்டல் நீச்சல்குளத்தில் இரண்டு மணி நேரம் இரு
தாமரையைத் ஏந்தி மிதந்து அவர் இந்த சாதனை படைத்துள்ளார்.
இவருக்கு பதஞ்சலி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை புரிந்தமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல் திருச்சி உய்யகொண்டான் திருமலை மவுண்ட் லிட்ரா ஜி பள்ளியில்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்திய வரைபடத்தில் நின்று யோகா செய்து புதிய சாதனை படைத்துள்ளனர். இதில் இந்திய வரைபடத்தில் அமர்ந்து பத்மாசனம், பத்ம மயில் ஆசனம், வஜ்ராசனம், சித்தாசனம், கோமுகாசனம் உள்ளிட்ட 20 ஆசனங்களை 21 நிமிடத்தில் செய்து முடித்து புதிய உலக சாதனை படைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சௌடாம்பிகா கல்வி குழும தலைவர் ராமமூர்த்தி, பாஜக மாநில துணைத்தலைவர் காந்தி, ருத்ர சாந்தி யோகாலயா கிருஷ்ணகுமார், பதஞ்சலி உலக சாதனை புத்தகத்தின் முதன்மை நடுவர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டு ஆர்வத்துடன் யோகா செய்து செய்தனர்.



Conclusion:திருச்சியில் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.