ETV Bharat / state

திருச்சி மதுபான கடையில் அடுத்தடுத்து கொள்ளை - ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானக் வகைகள்கொள்ளை

திருச்சி: அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான வகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

trichy tasmac wineshop theft
trichy tasmac wineshop theft
author img

By

Published : Mar 31, 2020, 12:13 PM IST

கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சியில் உள்ள அனைத்து மதுபான கடைகளும், அதனோடு இணைந்த பார்களும், விடுதிகளில் உள்ள ஏசி பார்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருச்சி உறையூர்- குடமுருட்டி சாலையில் கோணக்கரை சுடுகாடு அருகே உள்ள மதுபானக் கடையை நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான வகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக உறையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

trichy tasmac wineshop theft
திருச்சி மதுபானக் கடை

அதேபோல், திருச்சி பாலக்கரை பிச்சை நகரில் உள்ள மதுபான கடையை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான வகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக பாலக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:

கர்நாடகாவில் 12,000 N95 போலி உயர் ரக முகக்கவசங்கள் பறிமுதல்

கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சியில் உள்ள அனைத்து மதுபான கடைகளும், அதனோடு இணைந்த பார்களும், விடுதிகளில் உள்ள ஏசி பார்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருச்சி உறையூர்- குடமுருட்டி சாலையில் கோணக்கரை சுடுகாடு அருகே உள்ள மதுபானக் கடையை நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான வகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக உறையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

trichy tasmac wineshop theft
திருச்சி மதுபானக் கடை

அதேபோல், திருச்சி பாலக்கரை பிச்சை நகரில் உள்ள மதுபான கடையை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான வகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக பாலக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:

கர்நாடகாவில் 12,000 N95 போலி உயர் ரக முகக்கவசங்கள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.