ETV Bharat / state

'பட்டா வழங்கவில்லையெனில் நகராட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்' - Trichy should provide free housing strap

திருச்சி: திருச்சி அருகே இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை என்றால் நகராட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பட்டா வழங்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம்
பட்டா வழங்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம்
author img

By

Published : Jan 9, 2020, 5:16 PM IST

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டுவந்தனர். பின்னர் ஆட்சியர் சிவராசுவை சந்தித்து இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு அளித்தனர்.

பட்டா வழங்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம்

இதனைத் தொடர்ந்து மக்கள் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த ராபர்ட் கிறிஸ்டி என்பவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "பலமுறை வீட்டுமனைப் பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தோம். ஆனால் இதுவரை இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை என்றால் எதிர்வரும் நகராட்சி, மாநகராட்சித் தேர்தல்களைப் புறக்கணிப்போம்” என்றார்.

இதையும் படிங்க: 'பட்டா வழங்காவிட்டால் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்!'

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டுவந்தனர். பின்னர் ஆட்சியர் சிவராசுவை சந்தித்து இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு அளித்தனர்.

பட்டா வழங்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம்

இதனைத் தொடர்ந்து மக்கள் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த ராபர்ட் கிறிஸ்டி என்பவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "பலமுறை வீட்டுமனைப் பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தோம். ஆனால் இதுவரை இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை என்றால் எதிர்வரும் நகராட்சி, மாநகராட்சித் தேர்தல்களைப் புறக்கணிப்போம்” என்றார்.

இதையும் படிங்க: 'பட்டா வழங்காவிட்டால் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்!'

Intro:இலவச வீட்டுமனை பட்டா வழங்க வில்லை என்றால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம் என பெண்கள் அறிவித்துள்ளனர். Body:திருச்சி:
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வில்லை என்றால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம் என பெண்கள் அறிவித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் என்று ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆட்சியர் சிவராசுவை சந்தித்து இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தனர். அப்போது அனைத்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் முன்னேற்ற சங்க தைச் சேர்ந்த ராபர்ட் கிறிஸ்டி என்பவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், கடந்த 7 ஆண்டுகளாக திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் ஏழை குடும்பத்தினர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசு அனைவருக்கும் வீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவும் இடம் இல்லாத ஏழைகளுக்கு பயனளிக்கவில்லை. தற்போது இந்த திட்டத்தில் புதிதாக இலவச வீட்டு மனையுடன், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டித்தர மத்திய அரசு அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவரம்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏழை குடும்பத்தினர் 250 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுத்து வீடும் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வீட்டு மனைப்பட்டா வழங்கவில்லை என்றால் எதிர்வரும் நகராட்சி, மாநகராட்சி தேர்தலை புறக்கணித்து, ஆதார் அட்டை, ரேஷன் கார்டையும் அரசிடம் ஒப்படைப்போம். அதனால் மத்திய மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கையாக 250 குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி, வீடும் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.