ETV Bharat / state

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 100% வெற்றி பெறும்: திருநாவுக்கரசர் - trichy mp thirunavukarasar news

திருச்சி: சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி 100 விழுக்காடு வெற்றி பெறும் என்று எம்.பி. திருநாவுக்கரசர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

trichy mp thirunavukarasar thanks campaign
author img

By

Published : Aug 26, 2019, 8:50 PM IST

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பரப்புரை மேற்கொண்டார். திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் அருகே தொடங்கிய இந்த பரப்புரையில், முன்னாள் அமைச்சர் கே.என் நேரு, திமுக மாநகர செயலாளர் அன்பழகன் மற்றும் கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

பரப்புரையில் பேசிய திருநாவுக்கரசர், ’தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் அமைத்த பலமான கூட்டணி மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது. ஒரே ஒரு தொகுதி மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த பலமான கூட்டணி அடுத்து வரும் உள்ளாட்சி, சட்டப்பேரவைத் தேர்தலிலும் 100 விழுக்காடு வெற்றிபெறும்.

திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பரப்புரை

பல மாநிலங்களில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்காத நிலையில் ஸ்டாலின் மட்டுமே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதில் நிச்சயம் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு விரைவு ரயில் இயக்கவும், இதர மாநிலங்களுக்கு நேரடி ரயில் சேவை தொடங்கவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். இதுதொடர்பான துறை அமைச்சர்களையும் சந்தித்து வலியுறுத்துவேன். திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பரப்புரை மேற்கொண்டார். திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் அருகே தொடங்கிய இந்த பரப்புரையில், முன்னாள் அமைச்சர் கே.என் நேரு, திமுக மாநகர செயலாளர் அன்பழகன் மற்றும் கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

பரப்புரையில் பேசிய திருநாவுக்கரசர், ’தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் அமைத்த பலமான கூட்டணி மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது. ஒரே ஒரு தொகுதி மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த பலமான கூட்டணி அடுத்து வரும் உள்ளாட்சி, சட்டப்பேரவைத் தேர்தலிலும் 100 விழுக்காடு வெற்றிபெறும்.

திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பரப்புரை

பல மாநிலங்களில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்காத நிலையில் ஸ்டாலின் மட்டுமே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதில் நிச்சயம் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு விரைவு ரயில் இயக்கவும், இதர மாநிலங்களுக்கு நேரடி ரயில் சேவை தொடங்கவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். இதுதொடர்பான துறை அமைச்சர்களையும் சந்தித்து வலியுறுத்துவேன். திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Intro: நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்து வாக்காளர்களுக்கு திருச்சி எம்பி திருநாவுக்கரசர் நன்றி கூறினார்.


Body:திருச்சி:
சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி 100% வெற்றி பெறும் என்று எம்பி திருநாவுக்கரசர் கூறினார் .
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திருச்சி எம்பி திருநாவுக்கரசர் இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே தொடங்கிய இந்த நன்றி அறிவிப்பு பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு, திமுக மாநகர செயலாளர் அன்பழகன் மற்றும் கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது திருநாவுக்கரசர் பேசுகையில்,
தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அமைத்த பலமான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது. ஒரே ஒரு தொகுதி மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டது. இந்த பலமான கூட்டணி அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல் சட்டமன்ற தேர்தலிலும் 100 சதவீத வெற்றி பெறும். பல மாநிலங்களில் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவிக்காத நிலையில் ஸ்டாலின் மட்டுமே மமுதலாவதாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதில் நிச்சயம் இந்த கூட்டணி வெற்றி பெற்று திருச்சியில் நேரு அமைச்சர் ஆவார். அப்போது அவருடன் இணைந்து திருச்சி மக்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும். திருச்சியில் இருந்து பெங்களூருக்கு விரைவு ரயில் இயக்கவும், இதர மாநிலங்களுக்கு நேரடி ரயில் சேவை தொடங்கவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். அதோடு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களையும் சந்தித்து வலியுறுத்துவேன்.
திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. இதற்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Conclusion:திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.