ETV Bharat / state

'நான் போலீஸ் பேசுறேன். நீங்க ஆபாசப்படம் பார்த்தீங்க' எனக்கூறி ரூ.2ஆயிரம் பறித்த இளைஞர் கைது! - பணம் பறித்த வாலிபர் கைது

திருச்சியில் போலீஸ் எனக்கூறி பணம் பறித்த இளைஞரை திருச்சி சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர்.

போலீஸ் எனக்கூறி ரூ.20,000 பணம் பறித்த வாலிபர் கைது...!
போலீஸ் எனக்கூறி ரூ.20,000 பணம் பறித்த வாலிபர் கைது...!
author img

By

Published : Nov 3, 2022, 5:18 PM IST

திருச்சி: திருச்சியைச்சேர்ந்த ஒருவரை சில நாட்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னை காவல் துறையைச்சார்ந்தவரெனக் கூறிக்கொண்டார்.

மேலும், ”நீங்கள் செல்போனில் ஆபாசப்படம் பார்த்துள்ளீர்கள்...! இதுகுறித்து, காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இதற்காக உங்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய உள்ளோம்” என மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போனவர் தன் மீது வழக்கு ஏதும் பதியவேண்டாம் என கேட்டுக்கொண்டார். உடனே அந்த அடையாளம் தெரியாத நபர், அப்படியானால் தனது வங்கிக்கணக்கிற்கு பணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதை நம்பி அவர் முதல் தவணையாக ரூபாய் 5000 ரூபாயும், அடுத்த தவணையாக ரூ.15,600 என மொத்தம் ரூ. 20,600யை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

ஆனாலும், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் பாதிக்கப்பட்ட நபர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் அளித்தார். அதன் பெயரில் காவல் ஆய்வாளர் அன்புச்செல்வன் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபரைத் தேடி வந்தனர்.

பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண்ணை வைத்து விசாரணை செய்ததில், காவல்துறையைச் சேர்ந்தவர் போல் நடித்து மிரட்டல் விடுத்த நபர் கோவை வடவள்ளியினைச்சேர்ந்த அசோக் (23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து சைபர் கிரைம் காவல்துறையினர் அங்கு சென்று அவரைக் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவியை பின் தொடர்ந்து சென்று கழுத்தை அறுக்க முயற்சிக்கும் வாலிபர் - சிசிடிவி

திருச்சி: திருச்சியைச்சேர்ந்த ஒருவரை சில நாட்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னை காவல் துறையைச்சார்ந்தவரெனக் கூறிக்கொண்டார்.

மேலும், ”நீங்கள் செல்போனில் ஆபாசப்படம் பார்த்துள்ளீர்கள்...! இதுகுறித்து, காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இதற்காக உங்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய உள்ளோம்” என மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போனவர் தன் மீது வழக்கு ஏதும் பதியவேண்டாம் என கேட்டுக்கொண்டார். உடனே அந்த அடையாளம் தெரியாத நபர், அப்படியானால் தனது வங்கிக்கணக்கிற்கு பணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதை நம்பி அவர் முதல் தவணையாக ரூபாய் 5000 ரூபாயும், அடுத்த தவணையாக ரூ.15,600 என மொத்தம் ரூ. 20,600யை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

ஆனாலும், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் பாதிக்கப்பட்ட நபர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் அளித்தார். அதன் பெயரில் காவல் ஆய்வாளர் அன்புச்செல்வன் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபரைத் தேடி வந்தனர்.

பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண்ணை வைத்து விசாரணை செய்ததில், காவல்துறையைச் சேர்ந்தவர் போல் நடித்து மிரட்டல் விடுத்த நபர் கோவை வடவள்ளியினைச்சேர்ந்த அசோக் (23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து சைபர் கிரைம் காவல்துறையினர் அங்கு சென்று அவரைக் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவியை பின் தொடர்ந்து சென்று கழுத்தை அறுக்க முயற்சிக்கும் வாலிபர் - சிசிடிவி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.