ETV Bharat / state

‘கார்ப்பரேட்டை பலப்படுத்ததான் ரிசர்வ் வங்கியில் நிதி பெறப்படுள்ளதா?’

திருச்சி: ரிசர்வ் வங்கியிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடி நிதி பெறப்பட்டதே, கார்ப்பரேட் நிறுவனங்களை பலப்படுத்துவதற்காக தான் என்ற சந்தேகம் இருப்பதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறினார்.

author img

By

Published : Sep 3, 2019, 10:50 PM IST

நெல்லை முபாரக்

எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி பாலக்கரையில் உள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்த எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “பொருளாதார முன்னேற்றத்திற்கு பாஜக அரசு நடவடிக்கை எடுக்காததால்தான், 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமான பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இது மேலும் வீரியம் அடையும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். அதனால் பிரதமரும், நிதியமைச்சரும் இணைந்து இந்த தேக்க நிலையை மாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை முபாரக்

ரிசர்வ் வங்கியிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடி நிதி பெறப்பட்டதே, கார்ப்பரேட் நிறுவனங்களை பலப்படுத்துவதற்காகதான் என்ற ஒரு சந்தேகம் உள்ளது. காஷ்மீரில், 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு கருத்து சுதந்திரம் பறித்தது, ஜனநாயக விரோத போக்காகும். இதேபோல், அசாம் மாநிலத்தில் தேசிய குடியுரிமை பதிவேட்டில் 19 லட்சம் பேர் புறக்கணிக்கப்பட்டு, உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு விவகாரத்திலும் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்துவது, ஜனநாயகப் படுகொலையாகும். அதனால், உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்” என்று கூறினார்.

எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி பாலக்கரையில் உள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்த எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “பொருளாதார முன்னேற்றத்திற்கு பாஜக அரசு நடவடிக்கை எடுக்காததால்தான், 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமான பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இது மேலும் வீரியம் அடையும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். அதனால் பிரதமரும், நிதியமைச்சரும் இணைந்து இந்த தேக்க நிலையை மாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை முபாரக்

ரிசர்வ் வங்கியிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடி நிதி பெறப்பட்டதே, கார்ப்பரேட் நிறுவனங்களை பலப்படுத்துவதற்காகதான் என்ற ஒரு சந்தேகம் உள்ளது. காஷ்மீரில், 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு கருத்து சுதந்திரம் பறித்தது, ஜனநாயக விரோத போக்காகும். இதேபோல், அசாம் மாநிலத்தில் தேசிய குடியுரிமை பதிவேட்டில் 19 லட்சம் பேர் புறக்கணிக்கப்பட்டு, உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு விவகாரத்திலும் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்துவது, ஜனநாயகப் படுகொலையாகும். அதனால், உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்” என்று கூறினார்.

Intro:எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.


Body:திருச்சி:
கார்ப்பரேட் நிறுவனங்களை பலப்படுத்துவதற்காகவே ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு பெற்றுள்ளது என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறினார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி பாலக்கரையில் உள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
70 ஆண்டுகளாக இல்லாத வகையில் மோசமான பொருளாதார தேக்க நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. பொருளாதார முன்னேற்றத்திற்கு மத்திய பாஜக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தான் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேக்க நிலை மேலும் வீரியம் அடையும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
அதனால் பிரதமரும், நிதி அமைச்சரும் இணைந்து இந்த தேக்க நிலையை மாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கியிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடி நிதி பெறப்பட்டுள்ளது. இந்த நிதியை கார்ப்பரேட் நிறுவனங்களை பலப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் என்ற ஒரு சந்தேகம் உள்ளது. இது தவறான முடிவாகும். கார்ப்பரேட் நிறுவனங்களை பலப்படுத்திவிட்டால் பொருளாதார தேக்க நிலையை சரிசெய்து விடலாம் என்பது தவறான முடிவாகும். விவசாயிகளுக்கு தங்களது பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். மக்களுக்கு வாங்கும் திறன் அதிகரிக்க வேண்டும். அதனால் இந்த நிலையை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்தோனேசியாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை போல் இந்தியாவிலும் மோசமான வீழ்ச்சி ஏற்படும். காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது முதல் அங்கு கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. அங்கு தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். எந்த தலைவர்களும் காஷ்மீருக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இது ஜனநாயக விரோத போக்காகும். காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும். அதேபோல் அஸ்ஸாம் மாநில தேசிய குடியுரிமை பதிவேட்டில் 19 லட்சம் பேர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டிலேயே அவர்கள் அகதிகள் ஆக்கப்பட்டுள்ளனர். இது மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கையாகும். இவ்விஷயத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு பாரபட்சம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது அதற்கான சூழ்நிலை எதுவும் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் மேலும் தள்ளிப் போக கூட வாய்ப்பு உள்ளது. இது ஜனநாயக படுகொலை ஆகும். அதனால் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். 10க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகளில் 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது விலைவாசி ஏற்றத்திற்கும் வழி வகுக்கும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை உயர்த்தப்படும் சுங்கவரி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றார்.



Conclusion:தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று நெல்லை முபாரக் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.