ETV Bharat / state

“சென்னை வள்ளுவர் கோட்டத்தில் டிச.21 ஆம் தேதி போராட்டம்” - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 10:20 AM IST

Farmers protest: ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 21ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அச்சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன்
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கக் கூட்டம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 21 ஆம் தேதி போராட்டம்

திருச்சி: திருவண்ணாமலையில் சிப்காட்டுக்கு நிலம் எடுப்பதைக் கண்டித்து போராட்டம் நடத்தி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 21ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று (டிச.05) நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் பேசியதாவது,“ திருவண்ணாமலையில் சிப்காட்டுக்கு நிலம் எடுப்பதைக் கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது, குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

காவிரி டெல்டா பகுதியில் தண்ணீர் இல்லாமல் சம்பா சாகுபடி பொய்த்து விட்டது. அதனால், பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன், ஷேல் கேஸ் ஆகியன எடுப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் 30 அடி ஆழத்திற்கும் மேலாக மணல் எடுக்கப்பட்டதால், நிலத்தடி நீர்மட்டம் அளவு வெகுவாக குறைந்துள்ளது.

எனவே கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஆறுகளில் மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது. தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேலாக முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. அதற்கு உரிய பயிர் காப்பீடு வழங்க வேண்டும். மேலும், மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள், புழு தாக்குதலால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், கடனில் தத்தளிக்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கரும்பு, நெல், நிலக்கடலை போன்றவற்றிற்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்புச் சட்டம் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, தமிழக அரசு அந்த சட்டத்தை திரும்பப் பெறுவதோடு, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையெனில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 21ஆம் தேதி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

அதிமுக மற்றும் திமுக அரசு, விவசாயிகளின் ஓட்டுக்களை பெறுவதற்காக போட்டி போட்டுக் கொண்டு பல திட்டங்களை அறிவித்தனர். அதன்பின், விவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதோடு, விவசாயிகளுக்கான திட்டங்களை காலம் தாழ்த்தி அறிவித்து, பயன் பெற முடியாமல் செய்து விடுகின்றனர்” இவ்வாறு அவர் கூரினார்.

இதையும் படிங்க: "அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் தட்டுபாடு இல்லை.. மக்கள் இருப்பு வைக்க வேண்டாம்" - தலைமை செயலாளர்!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 21 ஆம் தேதி போராட்டம்

திருச்சி: திருவண்ணாமலையில் சிப்காட்டுக்கு நிலம் எடுப்பதைக் கண்டித்து போராட்டம் நடத்தி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 21ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று (டிச.05) நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் பேசியதாவது,“ திருவண்ணாமலையில் சிப்காட்டுக்கு நிலம் எடுப்பதைக் கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது, குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

காவிரி டெல்டா பகுதியில் தண்ணீர் இல்லாமல் சம்பா சாகுபடி பொய்த்து விட்டது. அதனால், பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன், ஷேல் கேஸ் ஆகியன எடுப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் 30 அடி ஆழத்திற்கும் மேலாக மணல் எடுக்கப்பட்டதால், நிலத்தடி நீர்மட்டம் அளவு வெகுவாக குறைந்துள்ளது.

எனவே கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஆறுகளில் மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது. தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேலாக முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. அதற்கு உரிய பயிர் காப்பீடு வழங்க வேண்டும். மேலும், மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள், புழு தாக்குதலால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், கடனில் தத்தளிக்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கரும்பு, நெல், நிலக்கடலை போன்றவற்றிற்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்புச் சட்டம் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, தமிழக அரசு அந்த சட்டத்தை திரும்பப் பெறுவதோடு, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையெனில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 21ஆம் தேதி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

அதிமுக மற்றும் திமுக அரசு, விவசாயிகளின் ஓட்டுக்களை பெறுவதற்காக போட்டி போட்டுக் கொண்டு பல திட்டங்களை அறிவித்தனர். அதன்பின், விவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதோடு, விவசாயிகளுக்கான திட்டங்களை காலம் தாழ்த்தி அறிவித்து, பயன் பெற முடியாமல் செய்து விடுகின்றனர்” இவ்வாறு அவர் கூரினார்.

இதையும் படிங்க: "அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் தட்டுபாடு இல்லை.. மக்கள் இருப்பு வைக்க வேண்டாம்" - தலைமை செயலாளர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.