திருச்சி: வையம்பட்டி அடுத்த சீத்தப்பட்டியைச் சேர்ந்தவர் காவியா (எ) கங்கேஸ்வரி(19). இவருக்கும் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த அன்பரசு(29) என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி அன்று, கங்கேஸ்வரியை அவரது தாய் அமராவதி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் 17ஆம் தேதி மாலை வீட்டில் தனிமையில் இருந்த கங்கேஸ்வரி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
![revenue commissioner girl hanged herself girl hanged herself two months after marriage trichy girl suicide suicide autopsy manapparai gh married woman suicide suicide case தற்கொலை தூக்கிட்டு தற்கொலை திருச்சியில் பெண் தற்கொலை திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் மணப்பாறை அரசு மருத்துவமனை உடற்கூராய்வு தற்கொலை வழக்கு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16409656_suicide.jpg)
மாலை வீடு திரும்பிய தந்தை சின்னக்கருப்பன், இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கங்கேஸ்வரியின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கங்கேஸ்வரி மரணம் கொலையா..? தற்கொலையா..? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் பெண் இறப்பு குறித்து, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்த நடிகை