ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு - திருமா கோரிக்கை

author img

By

Published : Nov 12, 2019, 9:06 PM IST

திருச்சி: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள்தொகை அடிப்படையில் தலித், பழங்குயின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Thirumavalavan about reservation in local body election

திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திருவள்ளுவரை அவமதித்தவர்கள் மீதும், மதச் சாயம் பூச முயற்சித்தவர்கள் மீதும் தமிழ்நாடு அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தொகை அடிப்படையில் தலித், பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். புதிய மாவட்டங்களிலும் இதை கடைபிடிக்க வேண்டும். மேலும் துணைமேயர், துணைத் தலைவர், போன்ற பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம்” என கூறினார்.

நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எவ்வித சங்கடமும் கிடையாது. நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தபோது, சிவாஜியும் அரசியலுக்கு வந்ததால் இரு பெரும் தலைவர்களை மக்கள் ஏற்கவில்லை. அதனால் சிவாஜி அரசியலில் சிறப்பாக விளங்க முடியாமல் போனது. இந்த அடிப்படையில்தான் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறியிருக்க வேண்டும்” என்றார்.

Thirumavalavan about reservation in local body election

திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திருவள்ளுவரை அவமதித்தவர்கள் மீதும், மதச் சாயம் பூச முயற்சித்தவர்கள் மீதும் தமிழ்நாடு அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தொகை அடிப்படையில் தலித், பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். புதிய மாவட்டங்களிலும் இதை கடைபிடிக்க வேண்டும். மேலும் துணைமேயர், துணைத் தலைவர், போன்ற பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம்” என கூறினார்.

நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எவ்வித சங்கடமும் கிடையாது. நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தபோது, சிவாஜியும் அரசியலுக்கு வந்ததால் இரு பெரும் தலைவர்களை மக்கள் ஏற்கவில்லை. அதனால் சிவாஜி அரசியலில் சிறப்பாக விளங்க முடியாமல் போனது. இந்த அடிப்படையில்தான் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறியிருக்க வேண்டும்” என்றார்.

Thirumavalavan about reservation in local body election
Intro:உள்ளாட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கும் இட ஒதுக்கீடு அவசியம்: திருமாவளவன் Body:குறிப்பு:
இந்த செய்தி காண விஷுவல் அடுத்த பைல் மூலம் அனுப்பி வைக்கப்படும்...
திருச்சி:
உள்ளாட்சிகளில் துணைத் தலைவர் பதவிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில். திருவள்ளுவரை அவமதித்தவர்கள் மீதும், மத சாயம் பூச முயற்சித்தவர்கள் மீதும் தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தொகை அடிப்படையில் தலித், பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். புதிய மாவட்டங்களிலும் இதை கடைபிடிக்க வேண்டும். மேலும் துணைமேயர், துணைத் தலைவர், போன்ற பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம் என்றார்.

நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்து குறித்த கேள்விக்கு திருமாவளவன் பதில் கூறுகையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எவ்வித சங்கடமும் கிடையாது. நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தபோது, சிவாஜியும் அரசியலுக்கு வந்ததால் இரு பெரும் தலைவர்களை மக்கள் ஏற்கவில்லை. அதனால் சிவாஜி அரசியலில் சிறப்பாக விளங்க முடியாமல் போனது. இந்த அடிப்படையில்தான் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து கூறியிருக்க வேண்டும். ஆனால் தற்போது முன்பு இருந்த நிலைமை கிடையாது. தற்போது சினிமாவை சினிமாவாக பார்க்கும் நிலை உள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள் இல்லாததால் வெற்றிடம் இருப்பதாக கருதி திரையுலகத்தினர் அரசியலுக்கு வருகின்றனர். அவர்களை மக்கள் உரிய மதிப்பீடு செய்வார்கள். உள்ளாட்சித் தேர்தலை தற்போது நடைபெறுமா? என்ற சந்தேகம் உள்ளது. அதனால் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி கட்சிகளுடன் பேசி உடன்பாடு எட்டப்படும். சென்னையில் பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி இறந்த பெண்ணுக்கு அரசு சார்பில் எவ்வித உதவியும் வழங்கப்படவில்லை. ஆறுதலும் கூறவில்லை. அரசு உரிய நிதி வழங்க வேண்டும்
அதேபோல் கோவையில் கொடிக்கம்பம் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண் காயம் அடைந்திருப்பது குறித்து முதலமைச்சர் கூறிய கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு உயர் ரக உயர் சிகிச்சை கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதர கட்சிகளுக்கு ஆளும் கட்சிதான் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.