ETV Bharat / state

ஓய்வு பெறும் வயது உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : May 13, 2020, 5:39 PM IST

திருச்சி: ஓய்வு பெறும் வயது உயர்வை கண்டித்து மணப்பாறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் காவல்துறையினர் 5 பேரை கைது செய்தனர்.

கைதான இளைஞர்கள்
கைதான இளைஞர்கள்

கரோனா நோய்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை, 58-ல் இருந்து 59-ஆக நீட்டித்து, முதலமைச்சர் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.


இதனை கண்டித்து இன்று திருச்சி மாவட்டம், மணப்பாறை பெரியார் சிலை முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புறநகர் மாவட்ட தலைவர் P.பாலு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவல் துறையினர், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் தடையை மீறி போராட்டம் நடத்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஐவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: 'அழாத நான் தூங்கனும்' - 8 மாத குழந்தையைக் கொலைசெய்த தந்தை!

கரோனா நோய்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை, 58-ல் இருந்து 59-ஆக நீட்டித்து, முதலமைச்சர் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.


இதனை கண்டித்து இன்று திருச்சி மாவட்டம், மணப்பாறை பெரியார் சிலை முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புறநகர் மாவட்ட தலைவர் P.பாலு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவல் துறையினர், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் தடையை மீறி போராட்டம் நடத்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஐவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: 'அழாத நான் தூங்கனும்' - 8 மாத குழந்தையைக் கொலைசெய்த தந்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.