ETV Bharat / state

சிதம்பரம் கைதில் அரசியல் சாயமா? : ஜி.கே. வாசன் பதில்

திருச்சி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் அரசியல் சாயம் உள்ளதா? என்பது நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே தெரியவரும் என்று ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

author img

By

Published : Aug 22, 2019, 4:19 PM IST

ஜி.கே வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே மூப்பனார் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சி சார்பில் விவசாயிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இந்த விழாவிற்கு அக்கட்சித் தலைவர் ஜி.கே வாசன் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஜி.கே. வாசன் பதிலளிகையில், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சட்டம் தனது கடமையை செய்துள்ளது. சட்டம் அனைவருக்கும் சமம் என்பது நிரூபணமாகியுள்ளது. விசாரணைக்கு பின்னர் தான் என்ன நிலை என்பது தெரியவரும்.

செய்தியாளர்களை சந்திக்கும் ஜி.கே வாசன்

நீதிமன்ற தீர்ப்பை பற்றி கூறுவதற்கு எதுவும் இல்லை. சிதம்பரம் மூத்த வழக்கறிஞர். குற்றச்சாட்டுகளையும், வழக்குகையும் அவரே எதிர் கொள்வார். இதற்காக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவதும் வாடிக்கையான விஷயம் தான். சிபிஐ விசாரணை, அதற்குப் பின்னர் நீதிமன்றம் உத்தரவின் முடிவுகளைப் பொறுத்து தான் சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் அரசியல் சாயம் உள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும். அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு செல்ல வேண்டும். இந்த நாடு சட்டத்திற்கு உட்பட்ட நாடு என்பதில் சந்தேகமில்லை என்றார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே மூப்பனார் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சி சார்பில் விவசாயிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இந்த விழாவிற்கு அக்கட்சித் தலைவர் ஜி.கே வாசன் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஜி.கே. வாசன் பதிலளிகையில், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சட்டம் தனது கடமையை செய்துள்ளது. சட்டம் அனைவருக்கும் சமம் என்பது நிரூபணமாகியுள்ளது. விசாரணைக்கு பின்னர் தான் என்ன நிலை என்பது தெரியவரும்.

செய்தியாளர்களை சந்திக்கும் ஜி.கே வாசன்

நீதிமன்ற தீர்ப்பை பற்றி கூறுவதற்கு எதுவும் இல்லை. சிதம்பரம் மூத்த வழக்கறிஞர். குற்றச்சாட்டுகளையும், வழக்குகையும் அவரே எதிர் கொள்வார். இதற்காக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவதும் வாடிக்கையான விஷயம் தான். சிபிஐ விசாரணை, அதற்குப் பின்னர் நீதிமன்றம் உத்தரவின் முடிவுகளைப் பொறுத்து தான் சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் அரசியல் சாயம் உள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும். அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு செல்ல வேண்டும். இந்த நாடு சட்டத்திற்கு உட்பட்ட நாடு என்பதில் சந்தேகமில்லை என்றார்.

Intro:தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.


Body:திருச்சி: ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் அரசியல் சாயம் உள்ளதா? என்பது நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே தெரியவரும் என்று ஜி கே வாசன் கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி கே மூப்பனார் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி சார்பில் விவசாயிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இந்த விழாவிற்கு அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். இதில் திருச்சி மாவட்ட தலைவர்கள் நந்தா செந்தில், குணா, விவசாயிகள் பிரிவு மாநில தலைவர் புலியூர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஜி கே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஜிகே வாசன் பதில் கூறுகையில்,
டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுபடி சட்டம் தனது கடமையை செய்துள்ளது. சட்டம் அனைவருக்கும் சமம் என்பது நிரூபணமாகியுள்ளது. விசாரணைக்கு பின்னர் தான் என்ன நிலை என்பது தெரியவரும். நீதிமன்ற தீர்ப்பை பற்றி கூறுவதற்கு எதுவும் இல்லை. சிதம்பரம் மூத்த வழக்கறிஞர். குற்றச்சாட்டுகளையும், வழக்கையும் அவரே எதிர் கொள்வார். இதற்காக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவதும் வாடிக்கையான விஷயம் தான். சிபிஐ விசாரணை ,அதற்குப் பின்னர் நீதிமன்றம் உத்தரவின் முடிவுகளைப் பொறுத்து தான் சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் அரசியல் சாயம் உள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும். அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு செல்ல வேண்டும். இந்த நாடு சட்டத்திற்கு உட்பட்ட நாடு என்பதில் சந்தேகமில்லை
என்றார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைவானவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது குறித்து வாசன் கூறுகையில், பெரும்பாலானவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எனது கருத்து. அதற்கேற்ப அரசும், கல்வி துறையினரும் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மாவட்டங்களை பிரிப்பதன் மூலம் தமிழகத்தின் பொருளாதாரம் வளரும். மாவட்ட மக்களும், பல துறைகளும் வளர்ச்சி அடையும். மாவட்டங்களைப் பிரிப்பதில் உள்நோக்கம் இருக்கிறது என்பது தவறான தகவல்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி கே மூப்பனார் பிறந்தநாள் விழா விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. விவசாயிகளின் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளை தமாகா தொடர்ந்து வற்புறுத்தும். இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. விவசாயிகளின் கோரிக்கைகள், போராட்டங்களுக்கு தொடர்ந்து துணை நிற்போம். தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்கு 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல் தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். காவிரி- கோதாவரி நதிகளை இணைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றார்.



Conclusion:மாவட்டங்களை பிரிப்பதன் மூலம் தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று ஜி கே வாசன் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.