ETV Bharat / state

காழ்ப்புணர்ச்சி காரணமாக கோடநாடு விவகாரம் குறித்து ஓபிஎஸ் பேச்சு: கே.பி.முனுசாமி தாக்கு!

author img

By

Published : Aug 2, 2023, 11:36 AM IST

Updated : Aug 2, 2023, 11:44 AM IST

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எங்கேயோ நடந்த குற்றங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது சுமத்த வேண்டும் என்ற நோக்கோடு ஓ.பன்னீர்செல்வம் கீழ்தனமாக பேசி வருவதாக கே.பி.முனுசாமி விமர்சனம் செய்துள்ளார்.

trichy
திருச்சி

திருச்சி: திருச்சி வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து நேற்று (ஆகஸ்ட் 01) நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி, செல்லூர் ராஜூ, அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் அதிமுக துணை பொதுச்செயலாளர்க் கே.பி.முனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் எழுச்சி பொன்விழா மாநாடு நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்தார். அதன்படி மாநாட்டின் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதோடு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி. பழனிசாமி அவர்கள் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநாட்டிற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

கடந்த 28 ஆம் தேதியிலிருந்து ராமநாதபுரம், சிவகங்கை ,விருதுநகர், தூத்துக்குடி, தேனி , மதுரை, திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டங்களில் செயல்வீரர், செயல் வீராங்கனை கூட்டங்களை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அனைத்து மாவட்டங்களில் இருக்கக்கூடிய அதிமுக தொண்டர்கள் எவ்வாறு வர வேண்டும் ,எப்படி செயல்பட வேண்டும் என அறிவுரைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும் தொண்டர்கள் மிகுந்த எழுச்சியாக இருக்கிறார்கள் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையைக் கொடுத்து இருக்கிறார்கள். மேலும், அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அதிமுகவில் நிரப்பப்படாத இடங்கள், குறிப்பாக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பதிவுகளை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை என்பது அதிமுகவின் தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் செல்வி. ஜெயலலிதா அவர்களைப் பக்தியோடு அரவணைக்கும் மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டின் மையப்பகுதியாக இருக்கக்கூடிய பகுதி என்பதால் அங்கு மாநாடு நடத்துகிறோம். டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அவர்கள் இணைந்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அரசியல் ரீதியாக இருவரும் அனாதையாக ஆகிவிட்டார்கள். ஓ.பன்னீர்செல்வம் செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு தர்மயுத்தத்தைத் தொடங்கினார். அந்த தர்ம யுத்தத்தில் நானும் இருந்தேன். மேலும், ஒவ்வொரு முறை மேடையில் சொல்லும் போதும் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் மரணம் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது என தெரிவித்தார்.

ஆகையால் அதைத் தீர விசாரிக்க வேண்டும் என தனியாக ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த சந்தேகம் யார் மீது உள்ளது என தெரிவித்தார், என்றால் சசிகலா மீது தெரிவித்தார். ஆனால் தற்போது சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று சொல்கிறார். உண்மையில் சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் எண்ணம் எங்களுக்கு இல்லை, ஆனால் அவர் கூறிய பின்பு அவர்களை அதிமுகவில் சேர்க்க வேண்டும் எண்ணமும் எங்களுக்கு இல்லை. அன்று அவர் பதவிக்காகக் குற்றம் சாட்டினார். ஆனால் இன்று யார் மீது குற்றம் சாட்டினாரோ அவர்களை அரசியல் நினைத்துச் செயல்பட வேண்டும் என்று கூறுகிறார். எவ்வளவு கீழ் தனமான அரசியல் சிந்தனை என்று புரிந்து கொள்ளுங்கள்.

ஓ.பன்னீர்செல்வம் காழ்ப்புணர்ச்சியுடன் இது போன்ற ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எங்கேயோ நடந்த குற்றங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சுமத்த வேண்டும் என்ற நோக்கோடு இதுபோன்ற கீழ்த்தனமாக செயல்களில் ஈடுபட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் யார் என்று மக்களுக்கு அடையாளம் காட்டியது அதிமுக தான். ஆனால் அனைத்தையும் மறந்து விட்டு எதிரிகளுடன் கூட்டணி வைத்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரை பற்றி பேசுவதே எங்களுக்கு அவமானமாக உள்ளது.

மேலும், மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு 30 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலங்களை கையகப்படுத்துவதில் நாங்கள் முனைப்போடு ஈடுபட்டு வருகிறோம். NLC பிரச்சனையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி வர்மன் முன்னின்று இதுவரை போராட்ட களத்தில் மக்களுக்கு ஆதரவாக போராடி வருகிறார்" என கூறினார்.

இதையும் படிங்க: ஆசீர்வாதம் எனக்கூறி பணம் பறிப்பு.. பழனியில் ஆண்களை குறிவைக்கும் திருநங்கைகள்!

திருச்சி: திருச்சி வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து நேற்று (ஆகஸ்ட் 01) நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி, செல்லூர் ராஜூ, அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் அதிமுக துணை பொதுச்செயலாளர்க் கே.பி.முனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் எழுச்சி பொன்விழா மாநாடு நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்தார். அதன்படி மாநாட்டின் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதோடு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி. பழனிசாமி அவர்கள் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநாட்டிற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

கடந்த 28 ஆம் தேதியிலிருந்து ராமநாதபுரம், சிவகங்கை ,விருதுநகர், தூத்துக்குடி, தேனி , மதுரை, திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டங்களில் செயல்வீரர், செயல் வீராங்கனை கூட்டங்களை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அனைத்து மாவட்டங்களில் இருக்கக்கூடிய அதிமுக தொண்டர்கள் எவ்வாறு வர வேண்டும் ,எப்படி செயல்பட வேண்டும் என அறிவுரைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும் தொண்டர்கள் மிகுந்த எழுச்சியாக இருக்கிறார்கள் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையைக் கொடுத்து இருக்கிறார்கள். மேலும், அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அதிமுகவில் நிரப்பப்படாத இடங்கள், குறிப்பாக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பதிவுகளை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை என்பது அதிமுகவின் தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் செல்வி. ஜெயலலிதா அவர்களைப் பக்தியோடு அரவணைக்கும் மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டின் மையப்பகுதியாக இருக்கக்கூடிய பகுதி என்பதால் அங்கு மாநாடு நடத்துகிறோம். டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அவர்கள் இணைந்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அரசியல் ரீதியாக இருவரும் அனாதையாக ஆகிவிட்டார்கள். ஓ.பன்னீர்செல்வம் செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு தர்மயுத்தத்தைத் தொடங்கினார். அந்த தர்ம யுத்தத்தில் நானும் இருந்தேன். மேலும், ஒவ்வொரு முறை மேடையில் சொல்லும் போதும் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் மரணம் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது என தெரிவித்தார்.

ஆகையால் அதைத் தீர விசாரிக்க வேண்டும் என தனியாக ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த சந்தேகம் யார் மீது உள்ளது என தெரிவித்தார், என்றால் சசிகலா மீது தெரிவித்தார். ஆனால் தற்போது சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று சொல்கிறார். உண்மையில் சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் எண்ணம் எங்களுக்கு இல்லை, ஆனால் அவர் கூறிய பின்பு அவர்களை அதிமுகவில் சேர்க்க வேண்டும் எண்ணமும் எங்களுக்கு இல்லை. அன்று அவர் பதவிக்காகக் குற்றம் சாட்டினார். ஆனால் இன்று யார் மீது குற்றம் சாட்டினாரோ அவர்களை அரசியல் நினைத்துச் செயல்பட வேண்டும் என்று கூறுகிறார். எவ்வளவு கீழ் தனமான அரசியல் சிந்தனை என்று புரிந்து கொள்ளுங்கள்.

ஓ.பன்னீர்செல்வம் காழ்ப்புணர்ச்சியுடன் இது போன்ற ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எங்கேயோ நடந்த குற்றங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சுமத்த வேண்டும் என்ற நோக்கோடு இதுபோன்ற கீழ்த்தனமாக செயல்களில் ஈடுபட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் யார் என்று மக்களுக்கு அடையாளம் காட்டியது அதிமுக தான். ஆனால் அனைத்தையும் மறந்து விட்டு எதிரிகளுடன் கூட்டணி வைத்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரை பற்றி பேசுவதே எங்களுக்கு அவமானமாக உள்ளது.

மேலும், மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு 30 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலங்களை கையகப்படுத்துவதில் நாங்கள் முனைப்போடு ஈடுபட்டு வருகிறோம். NLC பிரச்சனையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி வர்மன் முன்னின்று இதுவரை போராட்ட களத்தில் மக்களுக்கு ஆதரவாக போராடி வருகிறார்" என கூறினார்.

இதையும் படிங்க: ஆசீர்வாதம் எனக்கூறி பணம் பறிப்பு.. பழனியில் ஆண்களை குறிவைக்கும் திருநங்கைகள்!

Last Updated : Aug 2, 2023, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.