ETV Bharat / state

இன்னும் சற்றுநேரத்தில் வந்தடையும் ரிக் இயந்திரம்...!

author img

By

Published : Oct 26, 2019, 11:35 PM IST

திருச்சி: ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் இன்னும் சற்று நேரத்தில் நடுக்காட்டுப்பட்டி வந்தடையும்.

surjith

ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித் முதலில் 26 அடியில் சிக்கியது. அதன் பின்னர் 70 அடி ஆழத்திற்குச் சென்ற குழந்தை படிப்படியாக 85 அடியைத் தாண்டி தற்போது 100 அடிக்குச் சென்றுவிட்டது. குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளை கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும். நேற்று மாலை 5.40 மணிக்கு குழந்தையை மீட்க தொடங்கப்பட்ட மீட்புப் பணி 29 மணி நேரத்தைக் கடந்தும் இன்னும் மீட்கப்படவில்லை.

29 மணி நேரம் மீட்புக்குழுவினர் எட்டுக் கட்டமாக குழந்தையை மீட்க செய்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ராட்சத இயந்திரமான ரிக் இயந்திரம் மூலம் ஒரு மீட்டர் அகலத்திற்கு 100 அடிக்கு குழிதோண்ட நடவடிக்கை எடுத்துவருகின்றனர். மேலும், கிணற்றில் விழுந்த குழந்தை 100 அடிக்கும் கீழே சென்றுவிடாத வகையில் ஏர் லாக் மூலம் அவனது கை லாக் செய்யப்பட்டுள்ளது.

ஆழ்துளை தோன்றும் ரிக் இயந்திரம் திருச்சி வழியாக மணப்பாறை வந்தடைந்தது. இன்னும் சற்று நேரத்தில் நடுக்காட்டுப்பட்டி வந்தடையவுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலின்றி கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழி தோண்டியதும் மூன்று வீரர்கள் குழந்தையை மீட்க தயார் நிலையில் உள்ளனர். சுமார் 100 அடி ஆழத்தில் குழந்தையின் கை மேலே தெரியும் கண்காணிப்பு கேமரா பதிவு வெளியாகியுள்ளது.

ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித் முதலில் 26 அடியில் சிக்கியது. அதன் பின்னர் 70 அடி ஆழத்திற்குச் சென்ற குழந்தை படிப்படியாக 85 அடியைத் தாண்டி தற்போது 100 அடிக்குச் சென்றுவிட்டது. குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளை கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும். நேற்று மாலை 5.40 மணிக்கு குழந்தையை மீட்க தொடங்கப்பட்ட மீட்புப் பணி 29 மணி நேரத்தைக் கடந்தும் இன்னும் மீட்கப்படவில்லை.

29 மணி நேரம் மீட்புக்குழுவினர் எட்டுக் கட்டமாக குழந்தையை மீட்க செய்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ராட்சத இயந்திரமான ரிக் இயந்திரம் மூலம் ஒரு மீட்டர் அகலத்திற்கு 100 அடிக்கு குழிதோண்ட நடவடிக்கை எடுத்துவருகின்றனர். மேலும், கிணற்றில் விழுந்த குழந்தை 100 அடிக்கும் கீழே சென்றுவிடாத வகையில் ஏர் லாக் மூலம் அவனது கை லாக் செய்யப்பட்டுள்ளது.

ஆழ்துளை தோன்றும் ரிக் இயந்திரம் திருச்சி வழியாக மணப்பாறை வந்தடைந்தது. இன்னும் சற்று நேரத்தில் நடுக்காட்டுப்பட்டி வந்தடையவுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலின்றி கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழி தோண்டியதும் மூன்று வீரர்கள் குழந்தையை மீட்க தயார் நிலையில் உள்ளனர். சுமார் 100 அடி ஆழத்தில் குழந்தையின் கை மேலே தெரியும் கண்காணிப்பு கேமரா பதிவு வெளியாகியுள்ளது.

Intro:மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு பேட்டி.


Body:மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு பேட்டி.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.