ETV Bharat / state

பாஜக நிர்வாகி கொலையைத் தொடர்ந்து இஸ்லாமிய இளைஞர் படுகொலை - திருச்சியில் பதற்றம்! - trichy bjp member murderd

திருச்சி: காலையில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரவு இஸ்லாமிய இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி மாநகரில் உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

muslim youth muurder trichy
muslim youth muurder trichy
author img

By

Published : Jan 27, 2020, 11:52 PM IST

திருச்சி காந்தி மார்க்கெட் அருகேயுள்ள உப்புபாறை பகுதியை சேர்ந்தவர் விஜயரகு(39). இவர் பாஜக பாலக்கரை மண்டலச் செயலாளராக இருந்தார். இவர் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டிலிருந்து காந்தி மார்க்கெட் நுழைவு வாயில் அருகேயுள்ள டீக்கடைக்கு டீ குடிக்கச் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர் சேர்ந்து அவரை வெட்டிப் படுகொலை செய்தனர்.

இச்சம்பவம் திருச்சியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக திருச்சியில் போராட்டம் அதிகளவில் நடந்து வரும் நிலையில், பாஜக நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் விளைவாக பாஜக நிர்வாகிகள், இன்று காலை முதல் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திருச்சிக்கு வந்து இறந்த விஜயரகுவின் உடலைப் பெற்று தந்த பின்னர்தான் இந்த பிரச்னை சுமூகமாக முடிந்தது.

இதனைத்தொடர்ந்து, இன்று இரவு சுமார் 10 மணியளவில் திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடையருகே ராமகிருஷ்ணா சந்திப்பு என்ற இடத்தில் முகமது இசாக் (21) என்ற இஸ்லாமிய இளைஞர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றது யார் என்பது தெரியவில்லை.

காலையில் பாஜக நிர்வாகி கொலையால் பதற்றமான சூழ்நிலையில் இருந்த திருச்சி மாநகரம், தற்போது இஸ்லாமிய இளைஞர் படுகொலையால் உச்சகட்ட பதற்றத்தை எட்டியுள்ளது.

இதையும் படிங்க: துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி; வெளியான சிசிடிவி

திருச்சி காந்தி மார்க்கெட் அருகேயுள்ள உப்புபாறை பகுதியை சேர்ந்தவர் விஜயரகு(39). இவர் பாஜக பாலக்கரை மண்டலச் செயலாளராக இருந்தார். இவர் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டிலிருந்து காந்தி மார்க்கெட் நுழைவு வாயில் அருகேயுள்ள டீக்கடைக்கு டீ குடிக்கச் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர் சேர்ந்து அவரை வெட்டிப் படுகொலை செய்தனர்.

இச்சம்பவம் திருச்சியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக திருச்சியில் போராட்டம் அதிகளவில் நடந்து வரும் நிலையில், பாஜக நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் விளைவாக பாஜக நிர்வாகிகள், இன்று காலை முதல் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திருச்சிக்கு வந்து இறந்த விஜயரகுவின் உடலைப் பெற்று தந்த பின்னர்தான் இந்த பிரச்னை சுமூகமாக முடிந்தது.

இதனைத்தொடர்ந்து, இன்று இரவு சுமார் 10 மணியளவில் திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடையருகே ராமகிருஷ்ணா சந்திப்பு என்ற இடத்தில் முகமது இசாக் (21) என்ற இஸ்லாமிய இளைஞர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றது யார் என்பது தெரியவில்லை.

காலையில் பாஜக நிர்வாகி கொலையால் பதற்றமான சூழ்நிலையில் இருந்த திருச்சி மாநகரம், தற்போது இஸ்லாமிய இளைஞர் படுகொலையால் உச்சகட்ட பதற்றத்தை எட்டியுள்ளது.

இதையும் படிங்க: துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி; வெளியான சிசிடிவி

Intro:திருச்சியில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இஸ்லாமிய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் திருச்சியில் பதற்றம் நிலவுகிறதுBody:திருச்சி:
திருச்சியில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இஸ்லாமிய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் திருச்சியில் பதற்றம் நிலவுகிறது.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உப்புபாறை பகுதியை சேர்ந்தவர் விஜயரகு. (39).
இவர் பாஜக பாலக்கரை மண்டல செயலாளராக இருந்தார். இவர் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் வீட்டிலிருந்து காந்தி மார்க்கெட் நுழைவு வாயில் அருகே உள்ள டீக்கடைக்கு டீ குடிக்கச் சென்றபோது மர்ம நபர்கள் மூன்று பேர் சேர்ந்து அவரை வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக திருச்சியில் போராட்டம் அதிக அளவில் நடந்து வரும் நிலையில், பாஜக நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு ஏற்றார் போல் பாஜக நிர்வாகிகள் இந்த பிரச்சினையை பெரிதாக்கி, இன்று காலை முதல் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திருச்சிக்கு வந்து இறந்த விஜய ரகுவின் உடலை பெற்று தந்த பின்னர் தான் இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்தது.
இந்நிலையில் இன்று இரவு சுமார் 10 மணி அளவில் திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை அருகே ராமகிருஷ்ணா சந்திப்பு என்ற இடத்தில் உள்ள ஒரு கழிப்பிடம் அருகே முகமது இசாக் (21) என்ற இஸ்லாமிய இளைஞர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அவரை கொன்றது யார் என்பது உடனடியாக தெரியவில்லை. ஏற்கனவே விஜய ரகு கொலைக்காக திருச்சி மாநகர் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி இருந்தனர். ஒருபுறம் சாலை மறியலும், கடை வீதிகளில் கடைகளை அடைக்க சொல்லியும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் திருச்சியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதனால் மாநகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.