ETV Bharat / state

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அரசு அமைக்க உறுதுணையாக இருக்க வேண்டும் - வைகோ

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அரசு தான் அமையும். அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

author img

By

Published : Jul 29, 2023, 12:15 PM IST

vaiko
வைகோ
"நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அரசு தான் அமையும்" - வைகோ

திருச்சி: மதிமுக சார்பில் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாடு தொடர்பாக மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருச்சி ரெயில்வே ஜங்சன் அருகில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருச்சி மத்திய மண்டலத்திற்க்குட்பட்ட திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு, புதுக்கோட்டை, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, கரூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை மதிமுக நிர்வாகிகள் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மேலும் இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு தலைமை தாங்கினார். புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் டிடிசி சேரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மதிமுக பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டு மேடையில் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கும் 40 இடங்களை வென்று காட்டுவோம். மதுரையில் நடைபெறும் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாட்டுக்கு மதிமுகவினர் அனைவரும் எழுச்சியோடு வர வேண்டும். மதுரையை நோக்கி வாருங்கள் என்று சுவர் விளம்பரம் செய்து அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.

மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளோம். முல்லை பெரியார் அணை விவகாரத்தில் வெற்றி பெற்று உள்ளோம். தமிழக மக்கள் நலனுக்காக மதிமுக பல போராட்டங்கள் நடத்தி வருகிறது. தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்புவதும், காலதாமதம் செய்வதும் ஆளுநருக்கு வாடிக்கையாகி விட்டது.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நலனுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநரை பொறுப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் ஒப்படைக்க இந்த கையெழுத்து இயக்கத்தை மதிமுக தொடங்கி உள்ளது. வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அரசு தான் அமையும். அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்" என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் ஆடுதுரை முருகன், மாநில துணை பொதுச்செயலாளர் ரொஹையா, அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் நன்றி கூறினார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதர்' விருது!

"நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அரசு தான் அமையும்" - வைகோ

திருச்சி: மதிமுக சார்பில் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாடு தொடர்பாக மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருச்சி ரெயில்வே ஜங்சன் அருகில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருச்சி மத்திய மண்டலத்திற்க்குட்பட்ட திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு, புதுக்கோட்டை, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, கரூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை மதிமுக நிர்வாகிகள் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மேலும் இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு தலைமை தாங்கினார். புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் டிடிசி சேரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மதிமுக பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டு மேடையில் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கும் 40 இடங்களை வென்று காட்டுவோம். மதுரையில் நடைபெறும் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாட்டுக்கு மதிமுகவினர் அனைவரும் எழுச்சியோடு வர வேண்டும். மதுரையை நோக்கி வாருங்கள் என்று சுவர் விளம்பரம் செய்து அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.

மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளோம். முல்லை பெரியார் அணை விவகாரத்தில் வெற்றி பெற்று உள்ளோம். தமிழக மக்கள் நலனுக்காக மதிமுக பல போராட்டங்கள் நடத்தி வருகிறது. தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்புவதும், காலதாமதம் செய்வதும் ஆளுநருக்கு வாடிக்கையாகி விட்டது.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நலனுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநரை பொறுப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் ஒப்படைக்க இந்த கையெழுத்து இயக்கத்தை மதிமுக தொடங்கி உள்ளது. வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அரசு தான் அமையும். அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்" என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் ஆடுதுரை முருகன், மாநில துணை பொதுச்செயலாளர் ரொஹையா, அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் நன்றி கூறினார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதர்' விருது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.