ETV Bharat / state

கரோனா பயம் துளியும் இல்லாமல் டீ, வடைக்காக கூடிய கூட்டம்! - கரோனா பயம் துளியும் இல்லாமல் டீ, வடைக்காக முண்டியடித்த கூட்ட

திருச்சி: சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் டீ, வடை வாங்க பொதுமக்கள் முண்டியடித்த சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

manaparai People who do not practice social distancing
manaparai People who do not practice social distancing
author img

By

Published : Apr 9, 2020, 3:10 PM IST

கரோனா தொற்றின் பரவலால் இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கரோனா குறித்து விழிப்புணர்வுகளை மக்களிடையே அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை-கோவில்பட்டி சாலையில் அமைந்துள்ள பால் கூட்டுறவு சங்கத்தில் இன்று காலை பால் வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அங்கு விற்கப்பட்ட டீ, வடையை வாங்க அலைமோதினர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி தன்னார்வலர் ஒருவர் சோதனைச்சாவடி மையத்திலிருந்த காவலர்களிடம் தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

சமூக இடைவெளியைப் பின்பற்றாத மக்கள்

அதனையடுத்து, அங்கு விரைந்த காவல் துறையினர், கூட்டம் கூட்டமாக நின்ற பொதுமக்களிடம் அறிவுரைகள் கூறியும், எச்சரித்தும் அனுப்பினர்.

கரோனா தொற்றின் பரவலால் இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கரோனா குறித்து விழிப்புணர்வுகளை மக்களிடையே அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை-கோவில்பட்டி சாலையில் அமைந்துள்ள பால் கூட்டுறவு சங்கத்தில் இன்று காலை பால் வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அங்கு விற்கப்பட்ட டீ, வடையை வாங்க அலைமோதினர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி தன்னார்வலர் ஒருவர் சோதனைச்சாவடி மையத்திலிருந்த காவலர்களிடம் தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

சமூக இடைவெளியைப் பின்பற்றாத மக்கள்

அதனையடுத்து, அங்கு விரைந்த காவல் துறையினர், கூட்டம் கூட்டமாக நின்ற பொதுமக்களிடம் அறிவுரைகள் கூறியும், எச்சரித்தும் அனுப்பினர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.