ETV Bharat / state

குறி கேட்ட முதியவர் சந்தேகமான முறையில் மரணம் - போலீசார் விசாரணை - திருச்சி மர்ம மர்ணங்கள்

திருச்சி: மணப்பாறை அருகே குறி கேட்க வந்த முதியவர் சந்தேகமான முறையில் உயிரிழந்ததால், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதியவர் மர்மமான முறையில் மரணம்
author img

By

Published : Aug 31, 2019, 6:47 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொய்கைப்பட்டியில், சாமியார் ஒருவரை பார்த்து குறி கேட்க வந்தவர், திரும்பி செல்லும் வழியில் சந்தேகமான முறையில் உயிரிழந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள், அவரது ஆதார் அட்டையில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உறவினர்ளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் சென்ற காவல்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் புதுக்கோட்டை மாவட்டம் தேத்தாம்பட்டியைச் சேர்ந்த பொன்னன் (84) என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இது கொலையா? அல்லது இயற்கை மரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொய்கைப்பட்டியில், சாமியார் ஒருவரை பார்த்து குறி கேட்க வந்தவர், திரும்பி செல்லும் வழியில் சந்தேகமான முறையில் உயிரிழந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள், அவரது ஆதார் அட்டையில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உறவினர்ளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் சென்ற காவல்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் புதுக்கோட்டை மாவட்டம் தேத்தாம்பட்டியைச் சேர்ந்த பொன்னன் (84) என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இது கொலையா? அல்லது இயற்கை மரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:மணப்பாறை அருகே குறி கேட்க வந்த முதியவர் மர்மமான முறையில் மரணம் - போலீசார் விசாரைணை.Body:புதுக்கோட்டை மாவட்டம் தேத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கன் மகன் பொன்னன் (84). இவர் மாதந்தோறும்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொய்கைப் பட்டிக்கு சாமி பார்த்து குறி கேட்க வருவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் குறி கேட்டு விட்டு திரும்பிச் செல்லும் போது வழியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர் அருகே கிடந்த பையில் இருந்த ஆதார் அட்டை மற்றும் அதிலிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக அவரது உறவினர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மணப்பாறை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடியிருப்புகள் உள்ள பகுதியில் மர்மமான முறையில் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம்
இப்பகுதி மக்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது. காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் குறி கேட்க வந்தவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.