ETV Bharat / state

ஒண்டிவீரன் திருவுருவ படத்திற்கு திமுக சார்பில் மலரஞ்சலி ! - திருச்சி திமுக சார்பில் ஒண்டிவீரனுக்கு மரியாதை

திருச்சி: பிரிட்டிஷ் காலனியாதிக்க எதிர்ப்பு போராட்ட வீரர் ஒண்டிவீரன் திருவுருவ படத்திற்கு திமுக சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ஒண்டிவீரன் திருவுருவப்படத்திற்கு திமுக சார்பில் மலரஞ்சலி !
ஒண்டிவீரன் திருவுருவப்படத்திற்கு திமுக சார்பில் மலரஞ்சலி !
author img

By

Published : Aug 20, 2020, 4:11 PM IST

வெள்ளை ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 20ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவலர்கள், அமைச்சர்கள், சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்துவருகின்றனர்.

இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக தடை உத்தரவு உள்ளதால் சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் பெருமளவில் வருகையை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அலுவலகத்தில் ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஒண்டிவீரன் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், வண்ணை அரங்கநாதன் மற்றும் ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வெள்ளை ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 20ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவலர்கள், அமைச்சர்கள், சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்துவருகின்றனர்.

இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக தடை உத்தரவு உள்ளதால் சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் பெருமளவில் வருகையை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அலுவலகத்தில் ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஒண்டிவீரன் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், வண்ணை அரங்கநாதன் மற்றும் ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.