திருச்சி: திருச்சி மாநகராட்சி அலுவலத்தை சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமையில் தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரம் செய்து வருவபவர்கள் முற்றுகையிட்டனர்.
அப்போது 20 ஆண்டுகளுக்கும் மேலாக தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரம் செய்து வரும் தங்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அப்புறப்படுத்தக்கூடாது; 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை மீறக்கூடாது என முழக்கமிட்டனர்.
தொடர்ந்து தரைக்கடை நடத்துபவர்களுக்கு அடையாள அட்டையை புதுப்பித்து உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர் மாநகராட்சி மேயர் அன்பழகனை சந்தித்து 450-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இதையும் படிங்க: நீர்நிலைகளில் வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை