ETV Bharat / state

திருச்சியில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு!

திருச்சி : தச்சுத் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி தந்தை, மகன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

author img

By

Published : Dec 21, 2019, 1:51 PM IST

திருச்சி செய்திகள்
மின்சாரம் தாக்கி பலியான தந்தை, மகன்

கீழப்புலிவார்டு ரோடு, அண்ணா நகரையை அடுத்த வேதாத்திரி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (62). இவரது மகன் செந்திலுக்கு (33) இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தந்தை, மகன் ஆகிய இருவரும் இணைந்து தச்சுத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை இருவரும் தச்சு வேலையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஒரே நேரத்தில் தந்தை, மகன் ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கீழப்புலிவார்டு ரோடு, அண்ணா நகரையை அடுத்த வேதாத்திரி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (62). இவரது மகன் செந்திலுக்கு (33) இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தந்தை, மகன் ஆகிய இருவரும் இணைந்து தச்சுத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை இருவரும் தச்சு வேலையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஒரே நேரத்தில் தந்தை, மகன் ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிறகுகள் வெட்டப்பட்ட பச்சைக்கிளிகள் - சிகிச்சையளித்து வானில் பறக்கவிட்ட வனத்துறை!

Intro:தச்சுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தந்தை-மகன் மின்சாரம் தாக்கி இறந்தனர்.Body:திருச்சி:
தச்சுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தந்தை-மகன் மின்சாரம் தாக்கி இறந்தனர்.
திருச்சி
கீழபுலிவார்டு ரோடு அண்ணா நகரை அடுத்த வேதாத்திரி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் .( 62).
இவரது மகன் செந்தில் (33).
செந்திலுக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் சீனிவாசன் மற்றும் செந்தில் இருவரும் இன்று அதிகாலை தச்சுத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தகவலறிந்த
கோட்டை காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் தந்தை மகன் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.