ETV Bharat / state

திருச்சியில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்!

author img

By

Published : Aug 7, 2023, 2:49 PM IST

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி ஆற்றின் உள்ளே இறங்கி போராட்டம் நடத்தினர்.

farmers protest
திருச்சியில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்
திருச்சியில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்

திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 11வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென்று காவிரி ஆற்றில் உள்ளே இறங்கி போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் வலியுறுத்தும் கோரிக்கைகளாவன:

2016ஆம் ஆண்டில் வறட்சியின் பொழுது, பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுமாறு உயர்நீதிமன்றம் கூறிய பிறகு, பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய காலக்கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமல் போலியான கையெழுத்தை போட்டு, மத்திய காலக்கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது. ஆகையால், விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றனர்.

மேலும், மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் எனவும், அதேபோல், ஆலடியாறு அணையில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு அணையில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெறலாம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர்.

மேலும், கோயில் நிலங்களை தலைமுறை தலைமுறையாக சாகுபடி செய்து குடியிருந்து வரும் விவசாயிகளை வெளியேற்றாமல் வீட்டிற்கு வாடகையும், குத்தகைதாரராக பதிவு செய்து விவசாயிகளையும், பொது மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினர். குறிப்பாக, தக்காளி, வெங்காயம், காய்கறிகள் 1 கிலோ ரூ.1 க்கு விற்கும் போது கிராமங்களில் குளிர் சாதன கிடங்கை அரசே கட்டி கொடுத்து அதில் 1 கிலோ காய்கறிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலமாக ரூ.10 கடன் கொடுத்து வைத்திருந்தால், 1 கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விலை வராமல் 1 கிலோ தக்காளி, வெங்காயத்தை ரூ.40க்கு பொது மக்களுக்கு விற்க முடியும் என்றார்.

மேலும், 100 நாட்கள் கூலி, பிரதமர் ஓய்வூதிய திட்டம், முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவித்தொகையை, வீடு கட்ட கொடுக்கும் பணத்தை வங்கிகள் விவசாயக்கடன் பாக்கிக்காக பிடிக்கக் கூடாது, என்று மத்திய அரசு கூறிய பிறகும், பிடிக்கும் வங்கி மேலாளர்களை கைது செய்ய வேண்டும் எனவும், 100 நாட்கள் வேலையாட்களை கோடை காலமாக 4 மாத காலத்தில் வேலை கொடுத்து விட்டு சாகுபடி காலமாக 8 மாதத்திற்கு விவசாய வேலை செய்ய அனுமதிப்பதுடன், சாகுபடி காலத்தில் 100 நாட்கள் வேலை கொடுத்து விவசாயத்தை அழிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100, வழங்க உதவ வேண்டும் என்றனர்.

மேலும், காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும், காவிரியில் மாதாமாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில், டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அய்யாகண்ணு கூறுகையில்,“காவிரியில் தமிழகத்திற்கு, கர்நாடக அரசு போதுமான அளவிற்கு தண்ணீர் திறக்கவில்லை என்றும் இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கிறார்கள் இந்நிலையில், தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. ஆகையால், இதைக்கண்டித்து இன்று காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தொடர்ந்து 11வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது ஆனால், இதுவரை அரசு அதிகாரிகள் தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும், விவசாயிகளின் நலன்களில் அரசு அலட்சியப் போக்கில் செயல்படுகிறது என கடுமையாக சாடினார். ஆதலால் அரசு அதிகாரிகள் எங்களுடைய கோரிக்கையை குறித்து, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இல்லையென்றால் எங்களுடைய போராட்டம் தீவிரமடையும்” என்றார். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க:இரு நாள் அரசு பயணமாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு புதுச்சேரிக்கு வருகை!

திருச்சியில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்

திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 11வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென்று காவிரி ஆற்றில் உள்ளே இறங்கி போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் வலியுறுத்தும் கோரிக்கைகளாவன:

2016ஆம் ஆண்டில் வறட்சியின் பொழுது, பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுமாறு உயர்நீதிமன்றம் கூறிய பிறகு, பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய காலக்கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமல் போலியான கையெழுத்தை போட்டு, மத்திய காலக்கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது. ஆகையால், விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றனர்.

மேலும், மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் எனவும், அதேபோல், ஆலடியாறு அணையில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு அணையில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெறலாம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர்.

மேலும், கோயில் நிலங்களை தலைமுறை தலைமுறையாக சாகுபடி செய்து குடியிருந்து வரும் விவசாயிகளை வெளியேற்றாமல் வீட்டிற்கு வாடகையும், குத்தகைதாரராக பதிவு செய்து விவசாயிகளையும், பொது மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினர். குறிப்பாக, தக்காளி, வெங்காயம், காய்கறிகள் 1 கிலோ ரூ.1 க்கு விற்கும் போது கிராமங்களில் குளிர் சாதன கிடங்கை அரசே கட்டி கொடுத்து அதில் 1 கிலோ காய்கறிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலமாக ரூ.10 கடன் கொடுத்து வைத்திருந்தால், 1 கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விலை வராமல் 1 கிலோ தக்காளி, வெங்காயத்தை ரூ.40க்கு பொது மக்களுக்கு விற்க முடியும் என்றார்.

மேலும், 100 நாட்கள் கூலி, பிரதமர் ஓய்வூதிய திட்டம், முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவித்தொகையை, வீடு கட்ட கொடுக்கும் பணத்தை வங்கிகள் விவசாயக்கடன் பாக்கிக்காக பிடிக்கக் கூடாது, என்று மத்திய அரசு கூறிய பிறகும், பிடிக்கும் வங்கி மேலாளர்களை கைது செய்ய வேண்டும் எனவும், 100 நாட்கள் வேலையாட்களை கோடை காலமாக 4 மாத காலத்தில் வேலை கொடுத்து விட்டு சாகுபடி காலமாக 8 மாதத்திற்கு விவசாய வேலை செய்ய அனுமதிப்பதுடன், சாகுபடி காலத்தில் 100 நாட்கள் வேலை கொடுத்து விவசாயத்தை அழிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100, வழங்க உதவ வேண்டும் என்றனர்.

மேலும், காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும், காவிரியில் மாதாமாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில், டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அய்யாகண்ணு கூறுகையில்,“காவிரியில் தமிழகத்திற்கு, கர்நாடக அரசு போதுமான அளவிற்கு தண்ணீர் திறக்கவில்லை என்றும் இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கிறார்கள் இந்நிலையில், தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. ஆகையால், இதைக்கண்டித்து இன்று காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தொடர்ந்து 11வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது ஆனால், இதுவரை அரசு அதிகாரிகள் தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும், விவசாயிகளின் நலன்களில் அரசு அலட்சியப் போக்கில் செயல்படுகிறது என கடுமையாக சாடினார். ஆதலால் அரசு அதிகாரிகள் எங்களுடைய கோரிக்கையை குறித்து, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இல்லையென்றால் எங்களுடைய போராட்டம் தீவிரமடையும்” என்றார். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க:இரு நாள் அரசு பயணமாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு புதுச்சேரிக்கு வருகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.