ETV Bharat / state

மின்சாரம் தாக்கி விவசாயி, பசுமாடு உயிரிழப்பு: காவல் துறை விசாரணை

author img

By

Published : Feb 26, 2021, 8:18 AM IST

திருச்சி: கிருஷ்ணகவுண்டனூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி, பசுமாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Farmer, cow killed by electric shock: Police investigation!
Farmer, cow killed by electric shock: Police investigation!

திருச்சி மாவட்டம் கிருஷ்ணகவுண்டனூரைச் சேர்ந்த விவசாயி ராகவன் (45). இவரது வீட்டு கட்டுத்தறியில் கட்டியிருந்த பசுமாட்டின் மீது மின்கம்பத்தில் கட்டியிருந்த கேபிள் ஒயரின் ஒரு பகுதி அறுந்து விழுந்துள்ளது.

இதனிடையே கேபிள் ஒயரின் மற்றொரு பகுதி மின் கம்பியின் மீது பட்டதால் பசுமாட்டின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனைக் கண்டு பசுவை மீட்க முயற்சி செய்த ராகவன் மீதும் மின்சாரம் தாக்கியதில், பசு, விவசாயி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினர், மின்வாரிய ஊழியர்களுக்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் கேபிள் ஒயரை பாதுகாப்பாக அகற்றினர்.

இதையடுத்து, காவல் துறையினர் ராகவன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பேய் விரட்ட பெண்ணின் இருதயத்தை உருளைக்கிழங்குடன் வதக்கிச் சாப்பிட்ட கொடூரம்!

திருச்சி மாவட்டம் கிருஷ்ணகவுண்டனூரைச் சேர்ந்த விவசாயி ராகவன் (45). இவரது வீட்டு கட்டுத்தறியில் கட்டியிருந்த பசுமாட்டின் மீது மின்கம்பத்தில் கட்டியிருந்த கேபிள் ஒயரின் ஒரு பகுதி அறுந்து விழுந்துள்ளது.

இதனிடையே கேபிள் ஒயரின் மற்றொரு பகுதி மின் கம்பியின் மீது பட்டதால் பசுமாட்டின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனைக் கண்டு பசுவை மீட்க முயற்சி செய்த ராகவன் மீதும் மின்சாரம் தாக்கியதில், பசு, விவசாயி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினர், மின்வாரிய ஊழியர்களுக்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் கேபிள் ஒயரை பாதுகாப்பாக அகற்றினர்.

இதையடுத்து, காவல் துறையினர் ராகவன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பேய் விரட்ட பெண்ணின் இருதயத்தை உருளைக்கிழங்குடன் வதக்கிச் சாப்பிட்ட கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.