ETV Bharat / state

அப்போ குஷ்பூ, இப்போ மோடி... தமிழ்நாட்டில் புது கோயில்!

author img

By

Published : Dec 25, 2019, 8:37 PM IST

திருச்சி: துறையூர் அருகே பாஜக தொண்டரான விவசாயி ஒருவர், தனது விவசாய நிலத்தில் பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி நாள்தோறும் வழிபட்டுவருகிறார்.

மோடிக்கு கோயில் கட்டிய விவசாயி
மோடிக்கு கோயில் கட்டிய விவசாயி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சங்கர் (50). பாஜக தொண்டரான இவர் எரகுடி விவசாய சங்க தலைவராக இருக்கிறார். இவருக்கு பானுமதி (40) என்ற மனைவியும் தீபா என்ற மகளும், சதீஷ்குமார், சூர்யா ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

சங்கர் சிறுவயது முதலே பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர பற்றாளராக இருந்துவருகிறார். அவர் தனது சொந்த செலவில் மோடிக்கு கோயில் கட்டி, சிலை வைத்து வழிபட வேண்டும் என விரும்பியுள்ளார். ஆனால், விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் கோயில் கட்ட முடியவில்லை.

மோடிக்கு கோயில் கட்டிய விவசாயி

தற்போது, விவசாயத்தில் கிடைத்த ஓரளவு பணத்தைக் கொண்டு, கோயில் கட்டும் பணியை கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கி தற்போது முடித்துவிட்டதாகவும் கட்சியின் மூத்த தலைவர்களை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே லட்சியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கட்சியையும் தாண்டி பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர் ஆவார். அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்த கோயிலை கட்டி உள்ளதாக சங்கர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் - ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி வழிபடும் ‘அதிமுக’ பக்தர்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சங்கர் (50). பாஜக தொண்டரான இவர் எரகுடி விவசாய சங்க தலைவராக இருக்கிறார். இவருக்கு பானுமதி (40) என்ற மனைவியும் தீபா என்ற மகளும், சதீஷ்குமார், சூர்யா ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

சங்கர் சிறுவயது முதலே பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர பற்றாளராக இருந்துவருகிறார். அவர் தனது சொந்த செலவில் மோடிக்கு கோயில் கட்டி, சிலை வைத்து வழிபட வேண்டும் என விரும்பியுள்ளார். ஆனால், விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் கோயில் கட்ட முடியவில்லை.

மோடிக்கு கோயில் கட்டிய விவசாயி

தற்போது, விவசாயத்தில் கிடைத்த ஓரளவு பணத்தைக் கொண்டு, கோயில் கட்டும் பணியை கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கி தற்போது முடித்துவிட்டதாகவும் கட்சியின் மூத்த தலைவர்களை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே லட்சியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கட்சியையும் தாண்டி பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர் ஆவார். அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்த கோயிலை கட்டி உள்ளதாக சங்கர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் - ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி வழிபடும் ‘அதிமுக’ பக்தர்!

Intro:திருச்சி அருகே பாஜக தொண்டர் ஒருவர் பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்.Body:திருச்சி:
திருச்சி அருகே பாஜக தொண்டர் ஒருவர் பிரதமர் மோடிக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 50) விவசாயி. பாஜக தொண்டரான இவர் எரகுடி விவசாய சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பானுமதி (40) என்ற மனைவியும் தீபா என்ற மகளும், சதீஷ்குமார், சூர்யா ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
சங்கர் சிறுவயது முதலே பிரதமர் நரேந்திரமோடியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். அவர் தனது சொந்த செலவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்டி சிலை வைத்து வழிபட வேண்டும் என விரும்பினார்.
இந்நிலையில் துறையூரை அடுத்த எரகுடியில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் மோடிக்கு கோவில் கட்டி சிலை அமைத்துள்ளார். தினமும் அவரது சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தி வருகிறார்.
இதுகுறித்து சங்கர் கூறுகையில்,
பிரதமர் மோடி மீது சிறுவயது முதலே கொண்ட அன்பால், எந்தவித எதிர்பார்ப்பும், யாருடைய உதவியும் இன்றி எனது சொந்த செலவில் கோவில் கட்ட விரும்பினேன். விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் கோவில் கட்ட முடியவில்லை.
தற்போது, விவசாயத்தில் கிடைத்த ஓரளவு பணத்தை கொண்டு, கோவில் கட்டும் பணியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கினேன். தற்போது, கோவில் கட்டி முடித்துவிட்டேன். கட்சியின் மூத்த தலைவர்களை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம். கட்சியையும் தாண்டி பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர் ஆவார். அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்த கோவிலை கட்டி உள்ளேன் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.