ETV Bharat / state

பிரணவ் ஜுவல்லரி பண மோசடி; திருச்சியில் பொருளாதார குற்றப்பிரிவினர் அதிரடி சோதனை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 10:09 AM IST

Raid in Pranav Jewellers: வாடிக்கையாளர்களை கவரும் வகையில் திட்டங்களை அறிமுகம் செய்து, தற்போது கடைகளை மூடிவிட்டு பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பிரணவ் ஜுவல்லரியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

பிரணவ் ஜுவல்லரி பண மோசடி; திருச்சியில் பொருளாதார குற்றப்பிரிவினர் அதிரடி சோதனை!
பிரணவ் ஜுவல்லரி பண மோசடி; திருச்சியில் பொருளாதார குற்றப்பிரிவினர் அதிரடி சோதனை!

திருச்சி: திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரணவ் ஜுவல்லரியின் கிளைகள் செயல்பட்டு வந்தது. இக்கடையில் பலரும் முதலீடு செய்த நிலையில், தற்போது பிரணவ் ஜுவல்லர்ஸ் கடையை மூடி விட்டு மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரால், நேற்று (அக்.19) பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நகைக்கடைக்கு பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் விளம்பரம் செய்துள்ளார் என்பது குறிபிடதக்கது. 0 சதவீதம் செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என கொடுத்த விளம்பரத்தைப் பார்த்த பலரும் முதலில் லட்சங்களில் முதலீடு செய்துள்ளனர். 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 2 சதவீத வட்டி வீதம் என மாதம்தோறும் 10,000 ரூபாய் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், பத்து மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சி அறிவிப்பை நம்பி பலரும் 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த இரண்டு மாதமாக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்ததாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஓரிரு வாரங்களில் பணம் செட்டில் செய்வதாக ஜூவல்லரி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, திருச்சி கடை தவிர மற்ற பிரணவ் ஜுவல்லர்ஸ் கிளைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள், திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் செயல்படும் கடையை இரண்டு நாட்களுக்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பங்காரு அடிகளார் மறைவு; பிரதமர் இரங்கல் - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் அஞ்சலி!

இது குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தியதுடன், முறையாக புகார் அளியுங்கள், பின் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வந்த பிரணவ் ஜுவல்லரியில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஒரு பிரணவ் கடையில் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி லில்லி கிரேஸ் தலைமையிலும், மற்றொரு கடையில் கரூர் டிஎஸ்பி ராஜா சோமசுந்தரம் தலைமையிலும் நேற்று இரவு சோதனை நடைபெற்றது.

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் திட்டங்களை அறிமுகம் செய்து, முதலீடுகளைப் பெற்று பண மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் நேற்று புகார் அளிக்கப்பட்ட நிலையில், சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ள நிலையில், சுமார் 100 கோடி மேல் வரை மோசடி நடைபெற்றுள்ளதாக வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மருந்து கொடுக்காமல் 17 வயது சிறுமிக்கு பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை.. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை!

திருச்சி: திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோவில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரணவ் ஜுவல்லரியின் கிளைகள் செயல்பட்டு வந்தது. இக்கடையில் பலரும் முதலீடு செய்த நிலையில், தற்போது பிரணவ் ஜுவல்லர்ஸ் கடையை மூடி விட்டு மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரால், நேற்று (அக்.19) பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நகைக்கடைக்கு பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் விளம்பரம் செய்துள்ளார் என்பது குறிபிடதக்கது. 0 சதவீதம் செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என கொடுத்த விளம்பரத்தைப் பார்த்த பலரும் முதலில் லட்சங்களில் முதலீடு செய்துள்ளனர். 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 2 சதவீத வட்டி வீதம் என மாதம்தோறும் 10,000 ரூபாய் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், பத்து மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சி அறிவிப்பை நம்பி பலரும் 5 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த இரண்டு மாதமாக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்ததாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஓரிரு வாரங்களில் பணம் செட்டில் செய்வதாக ஜூவல்லரி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, திருச்சி கடை தவிர மற்ற பிரணவ் ஜுவல்லர்ஸ் கிளைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள், திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் செயல்படும் கடையை இரண்டு நாட்களுக்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பங்காரு அடிகளார் மறைவு; பிரதமர் இரங்கல் - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் அஞ்சலி!

இது குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தியதுடன், முறையாக புகார் அளியுங்கள், பின் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வந்த பிரணவ் ஜுவல்லரியில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஒரு பிரணவ் கடையில் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி லில்லி கிரேஸ் தலைமையிலும், மற்றொரு கடையில் கரூர் டிஎஸ்பி ராஜா சோமசுந்தரம் தலைமையிலும் நேற்று இரவு சோதனை நடைபெற்றது.

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் திட்டங்களை அறிமுகம் செய்து, முதலீடுகளைப் பெற்று பண மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் நேற்று புகார் அளிக்கப்பட்ட நிலையில், சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ள நிலையில், சுமார் 100 கோடி மேல் வரை மோசடி நடைபெற்றுள்ளதாக வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மருந்து கொடுக்காமல் 17 வயது சிறுமிக்கு பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை.. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.