ETV Bharat / state

'ராஜேந்திர பாலாஜி நாகரிகமாக பேச கற்றுக் கொள்ளவேண்டும்' - திருநாவுக்கரசர்!

author img

By

Published : Oct 1, 2019, 6:41 PM IST

திருச்சி: ராஜேந்திர பாலாஜி அமைச்சராக பேசுவதைக்காட்டிலும் முதலில் மனிதராக நாகரிகத்துடன் பேச கற்று கொள்ள வேண்டும் என்று திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

congress-thirunavukarasar-talks-about-rajendra-balaji

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், அத்தொகுதியின் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசுகையில், 'சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது போலவே இடைத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து டெங்கு பாதிப்பு குறித்து ஒப்பீடு செய்யக்கூடாது. அவ்வாறு ஒப்பீடு செய்வது கண்டனத்திற்குரியது.

டெங்கு பாதிப்பை ஒப்பிடுவது கண்டனத்துக்குரியது

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதை நிறுத்தவேண்டும். அவர் அமைச்சராக பேசுவதைக்காட்டிலும் முதலில் மனிதனாக பேச வேண்டும். அவர் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அவ்வாறு எடுக்கவில்லையென்றால் முதலமைச்சார் தான் அவரை இவ்வாறு பேசுவதற்கு ஊக்கப்படுத்துகிறார் என்று மக்கள் எண்ணுவார்கள்.

ஜெயலலிதா ஒரு பிரசாரத்தில் 'அந்த மோடியை விட, இந்த லேடியின் ஆட்சி சிறந்தது' என்று பேசுவது இணையத்தில் உலா வருகிறது. அதற்கு பக்கத்திலேயே ராஜேந்திர பாலாஜி, 'மோடி எங்கள் டாடி... மோடி எங்கள் டாடி' என்று சொல்வதும் வருகிறது.

’ராஜேந்திர பாலாஜி நாகரிகமாக பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்’ - திருநாவுக்கரசர்

இதையெல்லாம் பார்த்தாவது அவர் திருந்த வேண்டாமா! எதிர்காலத்திலாவது அவர் நாகரிகமாக பேச கற்றுக்கொள்ளவேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என நாம் மட்டுமல்ல உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. நவம்பரில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்கள்... நடைபெறுமா எனப்பொறுத்திருந்து பார்ப்போம்"என்றார்.

இதையும் படிங்க: நாங்குநேரியில் போட்டியிடும் ரூபி மனோகரனிடம் ஒரு ரூபாய் கூட இல்லையா - அமைச்சர் கேள்வி

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், அத்தொகுதியின் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசுகையில், 'சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது போலவே இடைத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து டெங்கு பாதிப்பு குறித்து ஒப்பீடு செய்யக்கூடாது. அவ்வாறு ஒப்பீடு செய்வது கண்டனத்திற்குரியது.

டெங்கு பாதிப்பை ஒப்பிடுவது கண்டனத்துக்குரியது

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதை நிறுத்தவேண்டும். அவர் அமைச்சராக பேசுவதைக்காட்டிலும் முதலில் மனிதனாக பேச வேண்டும். அவர் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அவ்வாறு எடுக்கவில்லையென்றால் முதலமைச்சார் தான் அவரை இவ்வாறு பேசுவதற்கு ஊக்கப்படுத்துகிறார் என்று மக்கள் எண்ணுவார்கள்.

ஜெயலலிதா ஒரு பிரசாரத்தில் 'அந்த மோடியை விட, இந்த லேடியின் ஆட்சி சிறந்தது' என்று பேசுவது இணையத்தில் உலா வருகிறது. அதற்கு பக்கத்திலேயே ராஜேந்திர பாலாஜி, 'மோடி எங்கள் டாடி... மோடி எங்கள் டாடி' என்று சொல்வதும் வருகிறது.

’ராஜேந்திர பாலாஜி நாகரிகமாக பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்’ - திருநாவுக்கரசர்

இதையெல்லாம் பார்த்தாவது அவர் திருந்த வேண்டாமா! எதிர்காலத்திலாவது அவர் நாகரிகமாக பேச கற்றுக்கொள்ளவேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என நாம் மட்டுமல்ல உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. நவம்பரில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்கள்... நடைபெறுமா எனப்பொறுத்திருந்து பார்ப்போம்"என்றார்.

இதையும் படிங்க: நாங்குநேரியில் போட்டியிடும் ரூபி மனோகரனிடம் ஒரு ரூபாய் கூட இல்லையா - அமைச்சர் கேள்வி

Intro:தேர்தலுக்கு பணம் வாங்கியதாக கம்யூனிஸ்ட்கள் பணம் வாங்கினர் என்று அவதூறு பரப்பப்படுகிறது என்று திருநாவுக்கரசர் கூறினார்.Body:
திருச்சி-:


தேர்தலுக்கு பணம் வாங்கியதாக கம்யூனிஸ்ட்கள் பணம் வாங்கினர் என்று அவதூறு பரப்பப்படுகிறது என்று திருநாவுக்கரசர் கூறினார்.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்,
சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போல் இடைத்தேர்தலிலும் வெற்றி பெறும்.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதை தடுக்க வேண்டும். டெங்கு பாதிப்பு குறித்து ஒப்பீடெல்லாம் செய்ய கூடாது. அவ்வாறு ஒப்பீடு செய்வது கண்டனத்திற்குரியது. டெங்கு பாதிப்பை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வை தமிழ்நாட்டில் ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை இருக்கும் நிலையில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது கண்டனத்திற்குரியது. இது போன்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றவர்களை தரகுறைவாக விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். அவர் அமைச்சராக பேசுவதை காட்டிலும் முதலில் மனிதனாக பேச வேண்டும். முதலமைச்சர் இதில் தலையிட்டு தடுக்க வேண்டும். அவரது பேச்சு தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலுக்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் யாரிடமிருந்தும் பணம் வாங்கி இருக்க மாட்டார்கள். அவர்கள் மீது அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. அ.தி.மு.க ஆட்சியின் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். இடைத்தேர்தலில் அதிமுக.வை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். எங்களது கூட்டணி தான் வெற்றி பெறும்.
உள்ளாட்சி தேர்தல் நடைப்பெறுமா? என நாம் மட்டுமல்ல உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. நவம்பரில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்கள். நடைபெறுமா? என பார்ப்போம் என்றார்.Conclusion: நவம்பரில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்கள். நடைபெறுமா? என பார்ப்போம் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.