ETV Bharat / state

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்தது ராஜதந்திரம் அல்ல: கே.எஸ். அழகிரி விமர்சனம் - k.s alagiri press meet

திருச்சி: மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்தது ராஜ தந்திரம் கிடையாது, பிக்பாக்கெட் அடித்ததற்கு சமம் என்று கே.எஸ். அழகிரி கடுமையாக விமர்சித்தார்.

k.s.alagiri
author img

By

Published : Nov 24, 2019, 12:01 AM IST

மத்திய அரசின் பொருளாதார சீர்கேடு நடவடிக்கைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு பொறுப்பாளர் சஞ்சய் தத், காங்கிரஸ் கட்சியின் திருச்சி பொறுப்பாளர் எம்பி வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் காங்கிரஸ் கட்சி சார்பில் நிதி வழங்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "கொல்லைபுரம் வழியாக மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்கிறது. சரத்பவாரின் கட்சியை உடைத்தது மட்டுமின்றி, அவரது குடும்பத்திலும் உடைப்பு ஏற்படுத்தி பாஜக அரசியல் செய்கிறது. பாஜக அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது ராஜதந்திரம் கிடையாது. இது பிக்பாக்கெட் அடித்ததற்கு சமமாகும். ஏழைகள் கல்வி கற்க முடியாத அளவுக்கு நுழைவுத் தேர்வுகளும், பொதுத் தேர்வுகளும் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் சனாதான நடைமுறையை கொண்டு வரவும், பாரம்பரியத் தொழிலை ஏழைகள் மேற்கொள்ளவும் வழிவகை செய்கிறது.

தமிழ்நாட்டில் பாஜக செய்ய முடியாத காரியங்களை தற்போது அதிமுக ஆட்சியின் மூலம் செய்துகொண்டிருக்கிறது. பாஜகவின் பொம்மையாக அதிமுக அரசு உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்வு முறை இல்லை என்பதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.

ஆள் பலம், பண பலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பாஜக அரசை விமர்சனம் செய்வார் என்ற ஒரே காரணத்திற்காக ப.சிதம்பரத்தை எவ்வித விசாரணையுமின்றி மோடியும், அமித் ஷாவும் சதி செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்" என்றார்.

மத்திய அரசின் பொருளாதார சீர்கேடு நடவடிக்கைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு பொறுப்பாளர் சஞ்சய் தத், காங்கிரஸ் கட்சியின் திருச்சி பொறுப்பாளர் எம்பி வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் காங்கிரஸ் கட்சி சார்பில் நிதி வழங்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "கொல்லைபுரம் வழியாக மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்கிறது. சரத்பவாரின் கட்சியை உடைத்தது மட்டுமின்றி, அவரது குடும்பத்திலும் உடைப்பு ஏற்படுத்தி பாஜக அரசியல் செய்கிறது. பாஜக அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது ராஜதந்திரம் கிடையாது. இது பிக்பாக்கெட் அடித்ததற்கு சமமாகும். ஏழைகள் கல்வி கற்க முடியாத அளவுக்கு நுழைவுத் தேர்வுகளும், பொதுத் தேர்வுகளும் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் சனாதான நடைமுறையை கொண்டு வரவும், பாரம்பரியத் தொழிலை ஏழைகள் மேற்கொள்ளவும் வழிவகை செய்கிறது.

தமிழ்நாட்டில் பாஜக செய்ய முடியாத காரியங்களை தற்போது அதிமுக ஆட்சியின் மூலம் செய்துகொண்டிருக்கிறது. பாஜகவின் பொம்மையாக அதிமுக அரசு உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்வு முறை இல்லை என்பதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.

ஆள் பலம், பண பலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பாஜக அரசை விமர்சனம் செய்வார் என்ற ஒரே காரணத்திற்காக ப.சிதம்பரத்தை எவ்வித விசாரணையுமின்றி மோடியும், அமித் ஷாவும் சதி செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்" என்றார்.

Intro:மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்தது ராஜேந்திரன் கிடையாது பிக்பாக்கெட் அடித்ததற்கு சமம் என்று கே.எஸ். அழகிரி கூறினார்.Body:Visual will sent in next file

திருச்சி;
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்தது ராஜேந்திரன் கிடையாது பிக்பாக்கெட் அடித்ததற்கு சமம் என்று கே.எஸ். அழகிரி கூறினார்.
மத்திய அரசின் பொருளாதார சீர்கேடு நடவடிக்கைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத், காங்கிரஸ் கட்சியின் திருச்சி பொறுப்பாளர் எம்பி வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
இந்தியாவின் பொருளாதாரம் படு பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்று இந்திய பொருளாதார நிபுணர்கள் மட்டுமின்றி, உலக பொருளாதார நிபுணர்களும் கூறுகின்றனர். ஆனால் இதையெல்லாம் ஏற்காத மத்திய அரசு, அயோத்தி, ராமர் பிரச்னை போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இவை ஏதோ மக்களின் அத்தியாவசிய பிரச்சனை போல அவர்கள் சித்தரிக்கிறார்கள். மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக.வுக்கு 15 நாட்களை ஆளுநர் அவகாசம் வழங்கினார். ஆனால் சிவசேனாவுக்கு 3 நாட்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 12 மணி நேரமும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். கொல் லைபுரம் வழியாக மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்கிறது. சரத்பவாரின் கட்சியை உடைதது மட்டுமின்றி, அவரது குடும்பத்திலும் உடைப்பு ஏற்படுத்தி பாஜக அரசியல் செய்கிறது.
மத்திய பாஜக அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது ராஜதந்திரம் கிடையாது. இது பிக்பாக்கெட் அடித்ததற்கு சமமாகும்.
ஏழைகள் கல்வி கற்க முடியாத அளவுக்கு நுழைவுத் தேர்வுகளும், பொதுத் தேர்வுகளும் கொண்டு வரப்படுகிறது.
இதன் மூலம் சனாதான நடைமுறையை கொண்டு வரவும், பாரம்பரியத் தொழிலை ஏழைகள் மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்படுகிறது. இதனால் நாம் போராடிப் பெற்ற சமூக நீதி அழிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் பாஜக ஆட்சியில் இருந்தால் கூட செய்ய முடியாத காரியங்களை தற்போது அதிமுக ஆட்சியின் மூலம் செய்துகொண்டிருக்கிறது.
பாஜகவின் பொம்மையாக அதிமுக அரசு உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு நேரடி தேர்வு முறை இல்லை என்பதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. ஆள் பலம், பண பலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக அரசை விமர்சனம் செய்வார் என்ற ஒரே காரணத்திற்காக ப.சிதம்பரத்தை எவ்வித விசாரணையுமின்றி மோடியும், அமித் ஷாவும் சதி செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் காங்கிரஸ் கட்சி சார்பில் நிதி வழங்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.