ETV Bharat / state

மதச்சார்பின்மை குறித்துப்பேச காங்கிரசுக்கு தகுதியில்லை - ஜி.கே.வாசன் - Congress does not deserve to talk about secularism

திருச்சி: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைத்ததன் மூலம் மதசார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரஸ் இழந்துவிட்டது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரஸ் இழந்துவிட்டது என ஜி.கே.வாசன் விமர்சனம்
author img

By

Published : Nov 22, 2019, 6:01 PM IST

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதி கூட்ட அரங்கில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உள்ளாட்சி தேர்தல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் விண்ணப்பங்களை வரும் 28ம் தேதிக்குள் பூர்த்திசெய்து 30ம் தேதி சென்னை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்' என்றார்.

தொடர்ந்து, 'இடைத்தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்திருப்பதன் மூலம் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த வழியில் உள்ளாட்சி தேர்தலிலும் செயல்படுவோம். ரஜினி, கமல் இணைந்து போட்டியிட்டால் அதற்கு வாக்காளர்கள் முடிவு எடுப்பார்கள். ரஜினி இன்றுவரை கட்சியே ஆரம்பிக்கவில்லை' எனக் கூறினார்.

மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரஸ் இழந்துவிட்டது என ஜி.கே.வாசன் விமர்சனம்

மேலும், 'ஆட்சி அதிகாரம் என்று வரும்போது கொள்கை பற்றி கவலை இல்லை என்பதை மகாராஷ்டிராவில் காங்கிரஸ் நிரூபித்துள்ளது. இனி மதசார்பின்மை குறித்து பேசும் தகுதியையும், சிறுபான்மையினரின் நம்பிக்கையையும் காங்கிரஸ் இழந்துவிட்டது என அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் நடக்க அதிமுகவே காரணம் - ஜி.கே. வாசன் கருத்து

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதி கூட்ட அரங்கில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உள்ளாட்சி தேர்தல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் விண்ணப்பங்களை வரும் 28ம் தேதிக்குள் பூர்த்திசெய்து 30ம் தேதி சென்னை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்' என்றார்.

தொடர்ந்து, 'இடைத்தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்திருப்பதன் மூலம் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த வழியில் உள்ளாட்சி தேர்தலிலும் செயல்படுவோம். ரஜினி, கமல் இணைந்து போட்டியிட்டால் அதற்கு வாக்காளர்கள் முடிவு எடுப்பார்கள். ரஜினி இன்றுவரை கட்சியே ஆரம்பிக்கவில்லை' எனக் கூறினார்.

மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரஸ் இழந்துவிட்டது என ஜி.கே.வாசன் விமர்சனம்

மேலும், 'ஆட்சி அதிகாரம் என்று வரும்போது கொள்கை பற்றி கவலை இல்லை என்பதை மகாராஷ்டிராவில் காங்கிரஸ் நிரூபித்துள்ளது. இனி மதசார்பின்மை குறித்து பேசும் தகுதியையும், சிறுபான்மையினரின் நம்பிக்கையையும் காங்கிரஸ் இழந்துவிட்டது என அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் நடக்க அதிமுகவே காரணம் - ஜி.கே. வாசன் கருத்து

Intro:மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைத்ததன் மூலம் மதசார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரஸ் இழந்துவிட்டது என்று ஜி.கே.வாசன் கூறினார்.Body:visual will sent in next file....

திருச்சி:
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைத்ததன் மூலம் மதசார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரஸ் இழந்துவிட்டது என்று ஜி.கே.வாசன் கூறினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உள்ளாட்சி தேர்தல் ஆய்வுக்கூட்டம் இன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டல் கூட்ட அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பு கட்சியினரிடமிருந்து விண்ணப்பங்களை வரும் 28ம் தேதி முதல் மாவட்ட நிர்வாகிகள் பெற்று, 30ம் தேதிக்குள் சென்னை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் மக்கள் அதிமுக.வுக்கு ஆதரவு அளித்திருப்பதன் மூலம் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டள்ளது. அந்த வழியில் உள்ளாட்சி தேர்தலிலும் செயல்படுவோம். எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளை கூட்டணி தலைமையிடம் பேசி கேட்டு சமூகமாக முறையில் பெறுவோம். மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு நேரடி தேர்தல் இல்லாத நடைமுறை திமுக ஆட்சியிலும் நடந்துள்ளது.
ரஜினி&கமல் இணைந்து போட்டியிட்டால் அதற்கு வாக்காளர்கள் முடிவு எடுப்பார்கள். ரஜினி இன்று கட்சியே ஆரம்பிக்கவில்லை. ஆட்சி அதிகாரம் என்று வரும்போது கொள்கை பற்றி கவலை இல்லை என்பதை மகாராஷ்டிராவில் காங்கிரஸ் நிரூபித்துள்ளது. இனி மதசார்பின்மை குறித்து பேசும் தகுதியையும், சிறுபான்மையினரின் நம்பிக்கையையும் காங்கிரஸ் இழந்துவிட்டது. இதன் மூலம் திமுக&காங்கிரஸ் கூட்டணி சிறுபான்மையினரின் நம்பிக்கை இழந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடம் வெளியில் தெரிந்துவிட்டது. அதனால் தமிழகத்தில் அதிமுக கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறும் என்றார்.

திமுக கூட்டணியில் உள்ள பிரச்னை காரணமாக சில கட்சிகள் வெளியேறலாம் என்ற கேள்விக்கு ஜி.கே.வாசன் பதில் கூறுகையில், அந்த கூட்டணியில் பிரச்னை வரலாம். சில கட்சிகள் வெளியேறலாம் என்றார்.

தொடர்ந்து வாசன் பேசுகையில், திருச்சி, கரூர் மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்வதால் இங்கு வேளாண் மண்டலம் அமைத்து, அரசே வாழையை கொள்முதல் செய்து சத்துணவு திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். கஜா புயலில் பாதித்து விடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் குவின்டாலுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றார். Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.