ETV Bharat / state

வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏலம்: செல்ஃபோனில் வீடியோ எடுத்ததால் பரபரப்பு!

author img

By

Published : Dec 11, 2019, 10:27 AM IST

திருச்சி: தொட்டியம் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏலம் நடத்தியதை செல்ஃபோனில் வீடியோ எடுத்ததால் தகராறு ஏற்பட்டது.

Auction for Ward Membership in trichy
செல்ஃபோனில் வீடியோ எடுத்ததால் ஏற்பட்ட தகராறு

தமிழ்நாட்டில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் ஆகியவற்றிற்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா அரசலூர் கிராமத்தில் 4ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் இரவு நேரத்தில் ஏலம் நடைபெற்றது.

செல்ஃபோனில் வீடியோ எடுத்ததால் ஏற்பட்ட தகராறு

இதில் அதிக தொகை கேட்பவருக்கு வார்டு உறுப்பினர் பதவி என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். இதை அங்கிருந்தவர்கள் செல்ஃபோனில் வீடியோ எடுத்துள்ளனர்.

இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொட்டியம் காவல் துறையினர் ஏலத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: ஏலத்துக்கு வந்த பதவிகள் - ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சம்; துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சம்!

தமிழ்நாட்டில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் ஆகியவற்றிற்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா அரசலூர் கிராமத்தில் 4ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் இரவு நேரத்தில் ஏலம் நடைபெற்றது.

செல்ஃபோனில் வீடியோ எடுத்ததால் ஏற்பட்ட தகராறு

இதில் அதிக தொகை கேட்பவருக்கு வார்டு உறுப்பினர் பதவி என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். இதை அங்கிருந்தவர்கள் செல்ஃபோனில் வீடியோ எடுத்துள்ளனர்.

இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொட்டியம் காவல் துறையினர் ஏலத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: ஏலத்துக்கு வந்த பதவிகள் - ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சம்; துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சம்!

Intro:திருச்சி அருகே ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏலம் நடத்தியதை செல்போனில் வீடியோ எடுத்ததால்
தகராறு ஏற்பட்டது. Body:திருச்சி:
திருச்சி அருகே ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏலம் நடத்தியதை செல்போனில் வீடியோ எடுத்ததால்
தகராறு ஏற்பட்டது.

தமிழகத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மாவட்ட கவுன்சிலர்கள் தேர்தல் இரண்டு கட்டங்களாக வரும் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்துள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா அரசலூர் கிராமத்தில் 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மாரியம்மன் கோவிலில் இரவு நேரத்தில் ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் அதிக தொகை கேட்பவருக்கு வார்டு உறுப்பினர் பதவி என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த ஒருவர்
2 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்ததால் தகராறு ஏற்பட்டது.
தகவலறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏலத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்து அனுப்பினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.