ETV Bharat / state

ஒரே வீட்டில் 5 பேருக்கு கரோனா தொற்று - தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

author img

By

Published : May 9, 2021, 5:22 PM IST

திருச்சி: ஒரே வீட்டை சேர்ந்த 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கரோனா செய்திகள்
ஒரே வீட்டில் 5 பேருக்கு கரோனா தொற்று - தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் மணப்பாறை ஒன்றியத்தில் 35 பேர், வையம்பட்டி ஒன்றியப் பகுதியில் 6 பேர், மருங்காபுரி ஒன்றிய பகுதியில் 10 பேர் என மொத்தம் 51 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் மணப்பாறை நகராட்சிக்குள்பட்ட ராஜீவ்நகர் ஆறாவது குறுக்கு சாலையில் உள்ள ஒரே வீட்டில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து, அந்த குடியிருப்பு பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் முகக்கவசம் அணிந்தும், 20 நிமிடத்திற்கு ஒருமுறை கைகளை கழுவியும் சுத்தம் செய்து பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க நகராட்சி தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் மணப்பாறை ஒன்றியத்தில் 35 பேர், வையம்பட்டி ஒன்றியப் பகுதியில் 6 பேர், மருங்காபுரி ஒன்றிய பகுதியில் 10 பேர் என மொத்தம் 51 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் மணப்பாறை நகராட்சிக்குள்பட்ட ராஜீவ்நகர் ஆறாவது குறுக்கு சாலையில் உள்ள ஒரே வீட்டில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து, அந்த குடியிருப்பு பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் முகக்கவசம் அணிந்தும், 20 நிமிடத்திற்கு ஒருமுறை கைகளை கழுவியும் சுத்தம் செய்து பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க நகராட்சி தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் பெண் காவலர்களின் விழிப்புணர்வு நடனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.