ETV Bharat / state

தலைவரின் மகனாக இருந்தாலும், நிறைய கடந்து சாதித்துள்ளார்: CM-படக்கண்காட்சியில் SK நெகிழ்ச்சி!

author img

By

Published : Apr 25, 2023, 9:42 PM IST

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று பார்வையிட்டார்.

முதலமைச்சரின் கண்காட்சியைப் பார்த்தால் ‘இப்படித்தான்’ இருக்கும்.. SK நெகிழ்ச்சி!
முதலமைச்சரின் கண்காட்சியைப் பார்த்தால் ‘இப்படித்தான்’ இருக்கும்.. SK நெகிழ்ச்சி!

நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர் சந்திப்பு

திருச்சி: திருச்சியில் நேற்றைய முன்தினம் (ஏப்ரல் 23) ‘எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை’ என்ற தலைப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், இந்த கண்காட்சியை திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்தக் கண்காட்சியில் சுமார் 400க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்ற மாநாடு புகைப்படங்கள், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற கூட்டங்கள் மற்றும் அரசு திட்டங்கள் என திமுகவின் வரலாற்றை இந்த புகைப்படங்கள் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப் பெற்றுள்ளன.

இதனை நடிகர் ஜோ மல்லூரி வடிவமைத்துள்ளார். இந்த நிலையில், இந்த புகைப்படக் கண்காட்சியை திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (ஏப்ரல் 25) பார்வையிட்டார். பின்னர், அங்கிருந்த வருகைப்பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன், “முதலமைச்சருடைய வாழ்க்கை வரலாறு பற்றி புகைப்படக் கண்காட்சியினை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த புகைப்படங்களைப் பார்க்கும்போது தெரிந்து கொண்டது என்னவென்றால், எவ்வளவு பெரிய உயரத்தை அடைய வேண்டுமோ, அதற்கு நிறைய வலிகளையும், தியாகங்களையும் தாண்டித்தான் வர வேண்டும் என்று தெரிகிறது. பெரிய ஆளுமை கொண்ட மாபெரும் தலைவரின் மகனாக இருந்தாலும், வாழ்க்கையில் நிறைய விஷயங்களைத் தாண்டி, நிறைய சாதனைகளைப் புரிந்து இந்த இடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வந்திருக்கிறார்.

ஒரு துறையில் ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால், அதைப் பார்க்கும்போது உந்துதலாக இருக்கும். ஆனால், இந்த புகைப்படக் கண்காட்சியை காண்பவர்கள் எந்த துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பாக இருக்கும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும், என்றைக்காவது ஒரு நாள் பெரியதாக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

எனக்கு மிகவும் பிடித்த நம்ம ஊர் திருச்சியில், நான் எங்கே எல்லாம் விளையாடிக் கொண்டு படித்தேனோ, அந்த இடத்தில் இப்படி ஒரு நிகழ்வில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று நான் ஒரு சினிமா துறையின் நடிகராக வருவதைத் தாண்டி, திருச்சி பையன் மற்றும் ஒரு கவர்மென்ட் எம்பிளாயின் மகனாக இன்றைக்கு இந்த கண்காட்சியைப் பார்ப்பது என்பது மிகவும் சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

முதலமைச்சருடைய சிறு வயது புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. முதலமைச்சர் ஜெயிலில் இருந்த காட்சிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், முதல் முறையாக இப்போதுதான் பார்க்கிறேன். எப்ஐஆர் காப்பி எல்லாம் கண்டபோது, மிகவும் வியப்பாக இருந்தது'' எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது அமைச்சர் கே.என்.நேரு உடன் இருந்தார்.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட சிவாஜி கணேசன் சிலையை திறக்க பிரபு கோரிக்கை

நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர் சந்திப்பு

திருச்சி: திருச்சியில் நேற்றைய முன்தினம் (ஏப்ரல் 23) ‘எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை’ என்ற தலைப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், இந்த கண்காட்சியை திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்தக் கண்காட்சியில் சுமார் 400க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்ற மாநாடு புகைப்படங்கள், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற கூட்டங்கள் மற்றும் அரசு திட்டங்கள் என திமுகவின் வரலாற்றை இந்த புகைப்படங்கள் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப் பெற்றுள்ளன.

இதனை நடிகர் ஜோ மல்லூரி வடிவமைத்துள்ளார். இந்த நிலையில், இந்த புகைப்படக் கண்காட்சியை திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் இன்று (ஏப்ரல் 25) பார்வையிட்டார். பின்னர், அங்கிருந்த வருகைப்பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன், “முதலமைச்சருடைய வாழ்க்கை வரலாறு பற்றி புகைப்படக் கண்காட்சியினை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த புகைப்படங்களைப் பார்க்கும்போது தெரிந்து கொண்டது என்னவென்றால், எவ்வளவு பெரிய உயரத்தை அடைய வேண்டுமோ, அதற்கு நிறைய வலிகளையும், தியாகங்களையும் தாண்டித்தான் வர வேண்டும் என்று தெரிகிறது. பெரிய ஆளுமை கொண்ட மாபெரும் தலைவரின் மகனாக இருந்தாலும், வாழ்க்கையில் நிறைய விஷயங்களைத் தாண்டி, நிறைய சாதனைகளைப் புரிந்து இந்த இடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வந்திருக்கிறார்.

ஒரு துறையில் ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால், அதைப் பார்க்கும்போது உந்துதலாக இருக்கும். ஆனால், இந்த புகைப்படக் கண்காட்சியை காண்பவர்கள் எந்த துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பாக இருக்கும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும், என்றைக்காவது ஒரு நாள் பெரியதாக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

எனக்கு மிகவும் பிடித்த நம்ம ஊர் திருச்சியில், நான் எங்கே எல்லாம் விளையாடிக் கொண்டு படித்தேனோ, அந்த இடத்தில் இப்படி ஒரு நிகழ்வில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று நான் ஒரு சினிமா துறையின் நடிகராக வருவதைத் தாண்டி, திருச்சி பையன் மற்றும் ஒரு கவர்மென்ட் எம்பிளாயின் மகனாக இன்றைக்கு இந்த கண்காட்சியைப் பார்ப்பது என்பது மிகவும் சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது.

முதலமைச்சருடைய சிறு வயது புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. முதலமைச்சர் ஜெயிலில் இருந்த காட்சிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், முதல் முறையாக இப்போதுதான் பார்க்கிறேன். எப்ஐஆர் காப்பி எல்லாம் கண்டபோது, மிகவும் வியப்பாக இருந்தது'' எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது அமைச்சர் கே.என்.நேரு உடன் இருந்தார்.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட சிவாஜி கணேசன் சிலையை திறக்க பிரபு கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.