ETV Bharat / state

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து - ஒருவர் பலி - One killed

திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் ஒருவர் பலியானார்.

திருச்சி மதுரை நெடுஞ்சாலையில்
திருச்சி மதுரை நெடுஞ்சாலையில்
author img

By

Published : Feb 15, 2022, 1:43 PM IST

Updated : Feb 15, 2022, 1:55 PM IST

திருச்சி: மணப்பாறை அருகே உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வலசுபட்டி எனும் இடத்தில் கீழகோரபட்டியைச் சேர்ந்த அழகர் (58) என்பவர் பெட்ரோல் நிரப்புவதற்காக சாலையின் மறுபுறத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வாகனத்தை திருப்பியுள்ளார்.

அப்போது, மதுரையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த வளநாடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வளநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பேனர் விழுந்து பெண் உயிரிழந்த வழக்கு - ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

திருச்சி: மணப்பாறை அருகே உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வலசுபட்டி எனும் இடத்தில் கீழகோரபட்டியைச் சேர்ந்த அழகர் (58) என்பவர் பெட்ரோல் நிரப்புவதற்காக சாலையின் மறுபுறத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வாகனத்தை திருப்பியுள்ளார்.

அப்போது, மதுரையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த வளநாடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வளநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பேனர் விழுந்து பெண் உயிரிழந்த வழக்கு - ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Last Updated : Feb 15, 2022, 1:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.