பொய்யூர், பெரம்பலூர் ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து அரியலூருக்கு மின்சாரம் வரும் முக்கியமான மின்மாற்றி உள்ளது. இங்கு, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
இதனைப் பார்த்த மின்சாரத் துறை ஊழியா்கள் அரியலூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே, பெரம்பலூர், பொய்யூர் துணை மின் நிலையங்களை தொடர்பு கொண்டு மின்சார விநியோகத்தை ஊழியர்கள் நிறுத்தக் கூறினர்.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருந்தபோதும் மின்மாற்றி முற்றிலும் கருகி நாசமானது.
இதனால் அரியலூர், செந்துறை, கீழப்பாவூர், தேளூர், நடுவலூர் ஆகிய துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.