தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூலை28) ஒரே நாளில் 6 ஆயிரத்து 972 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 688 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,659 ஆக உள்ளது.
இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 149 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை 1,313 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று ஒரே நாளில் 63 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 2,297 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததால், கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. தற்போது திருச்சி மாவட்டத்தில் 1,398 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: திருவாரூரில் 1500-ஐ கடந்த கரோனா பாதிப்பு