ETV Bharat / state

குளிக்க சென்றபோது ஆற்றில் மூழ்கி இளைஞர் பலி!

திருவள்ளூர்: ஆரணி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது, தண்ணீரில் மூழ்கி தனியார் தபால் சேவை நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

author img

By

Published : Dec 21, 2019, 8:16 PM IST

thiruvallur latest news
thiruvallur latest news

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிபாபு. இவர் தனியார் தபால் சேவை நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்துவருகிறார். தனது நண்பர்களுடன் ஹரிபாபு அங்குள்ள ஆரணி ஆற்றில் குளிக்க சென்றார்.

குளித்துக் கொண்டிருந்தபோது நீருக்குள் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். நீரில் மூழ்கிய அவரை, நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், ஆரணி காவல் துறையினருக்கு தகவல் அளித்ததனர்.

குளிக்க சென்றபோது ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மிதவை காற்றுப்பை உதவியுடன் ஹரிபாபுவை இறந்த நிலையில் கைப்பற்றினர். பின் அவரது உடலை உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து ஆரணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: செல்போன் திருட்டில் சிறை சென்று திரும்பிய இளைஞர் தற்கொலை

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிபாபு. இவர் தனியார் தபால் சேவை நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்துவருகிறார். தனது நண்பர்களுடன் ஹரிபாபு அங்குள்ள ஆரணி ஆற்றில் குளிக்க சென்றார்.

குளித்துக் கொண்டிருந்தபோது நீருக்குள் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். நீரில் மூழ்கிய அவரை, நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், ஆரணி காவல் துறையினருக்கு தகவல் அளித்ததனர்.

குளிக்க சென்றபோது ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மிதவை காற்றுப்பை உதவியுடன் ஹரிபாபுவை இறந்த நிலையில் கைப்பற்றினர். பின் அவரது உடலை உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து ஆரணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: செல்போன் திருட்டில் சிறை சென்று திரும்பிய இளைஞர் தற்கொலை

Intro:திருவள்ளூர் அருகே ஆரணி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது தனியார் தபால் சேவை நிறுவன ஊழியர் பிணமானார். தீயணைப்புத் துறையினரால் சடலம் மீட்பு.


Body:திருவள்ளூர் மாவட்டம் ஆரணி சேர்ந்தவர் அரிபாபு இவர் தனியார் தபால் சேவை நிறுவன ஊழியர் ஆனவர். ஹரிபாபு அங்குள்ள ஆரணி ஆற்றில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் நீரில் மூழ்கிய அவரைத் தேடித் தேடி கலைத்த பின்பு ஆரணி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மிதவை காற்றுப்பை உதவியுடன் ஆரணி ஆற்றில் மாயமான ஹரிபாபுவின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது ஹரிபாபுவின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஆரணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குளிக்கச்சென்ற நண்பர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.