ETV Bharat / state

சனாதன நூலை தடைசெய்ய வலியுறுத்தி விசிக ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Oct 24, 2020, 10:05 PM IST

தேனி: பெரியகுளத்தில் சனாதன நூலை தடைசெய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

sanatana dharma book
விசிக ஆர்ப்பாட்டம்

மனுதர்மம் எனும் சனாதன நூலை தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று (அக்.24) விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு காவல் துறையினரிடம் அனுமதி கேட்டனர். ஆனால், அனுமதி தர மறுத்ததால் அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் சாலையில் அமர்ந்து பெண்களை காலம் காலமாக இழிவுபடுத்தும் மனுதர்மம் எனும் சனாதன நூலை தடை செய்யக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து பெரியகுளம் காவல் துணை கண்காணிபாளர் முத்துக்குமாரின் உத்தரவின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்தனர்.

மனுதர்மம் எனும் சனாதன நூலை தடை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று (அக்.24) விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு காவல் துறையினரிடம் அனுமதி கேட்டனர். ஆனால், அனுமதி தர மறுத்ததால் அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் சாலையில் அமர்ந்து பெண்களை காலம் காலமாக இழிவுபடுத்தும் மனுதர்மம் எனும் சனாதன நூலை தடை செய்யக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து பெரியகுளம் காவல் துணை கண்காணிபாளர் முத்துக்குமாரின் உத்தரவின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.