ETV Bharat / state

குடிமராமத்துப் பணிகளின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டியவை - நீதிமன்றம் வழிகாட்டுதல்!

author img

By

Published : Sep 9, 2020, 5:31 PM IST

மதுரை : குடிமராமத்துப் பணிகள் குறித்த தகவல்களை மக்கள் அறியும்படி இணையதளத்தில் வெளியிட வேண்டுமென தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

குடிமராமத்து பணிகளின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டியவை - நீதிமன்றம் வழிக்காட்டுதல்!
குடிமராமத்து பணிகளின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டியவை - நீதிமன்றம் வழிக்காட்டுதல்!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள முறையான வழிகாட்டுதல்களை வழங்கிடக்கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த போஸ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தனர்.

அம்மனுவில், "ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகள் ஒதுக்கீடு செய்ததை ரத்துசெய்ய வேண்டும். முறைப்படி தேர்தல் நடத்தி குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் பாசன மேலாண்மை முறை சட்டப்படி மேலாண்மை குழுவை உடனடியாக அமைத்து நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் மூலம் பொதுப்பணித் துறை ஒரு முழுமையான திட்டத்தை தயாரிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக நடைபெற்றுவந்தன. இந்நிலையில், இன்று அம்மனுக்கள் மீது இறுதி விசாரணை நடைபெற்றது.

இதனையடுத்து, உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், "தமிழ்நாடு விவசாயிகள் பாசன மேலாண்மை முறை சட்டப்படி மேலாண்மை குழுவை உடனடியாக அமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் மூலம் பொதுப்பணித்துறை ஒரு முழுமையான திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

அத்திட்டத்தில், நீர்ப்பிடிப்பு பகுதியின் எல்லை, ஆக்கிரமிப்பு மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது, உள் மற்றும் வரத்து கால்வாய்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட பணிகள் தொடர்பான தகவல்கள் இருக்க வேண்டும்.

மேலும், நில அளவை மற்றும் கிராம வரைப்படத்தின்படி, கால்வாய்கள் அடையாளம் காணும் பணியில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் ஈடுபடவேண்டும்.

கால்வாய்கள் மூலம் கூடுதல் மழை நீரை விவசாய நிலங்களில்பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். விவசாயிகள் பயனடையும் வகையில் கடைமடை வரை பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.

எல்லையை நிர்ணயிக்கும் வரைபடங்களில் நீர்நிலைகளை அடையாளம் காண வேண்டும். முறைகேடுகளாக நீர் நிலைகளில் பட்டா வழங்கியிருந்தால் அவற்றின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யூடிஆர் மற்றும் 'அ' பதிவேட்டின்படி, நீர்நிலைகள் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதில், அளவு குறைந்திருந்தால் அதற்குரிய காரணம் பதிவு செய்யப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு இருத்தால் அகற்ற வேண்டும்.

நீர்நிலைகளுக்கு வரத்து இல்லாவிட்டால் அதற்குரிய காரணத்தை கண்டறிய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து, குடிமராமத்து பணியில் மரக்கன்று நடுவது கட்டாயமாக வேண்டும்.

நீர்நிலைகளின் கரைகள் வலுவாக இருக்க, எல்லையை பாதுகாக்க தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாசன குழுக்கள் மரக்கன்றுகள் முறையாக பராமரித்து, நீர் நிலைகள் மற்றும் குடிமராமத்து தொடர்பான விபரங்களை வெப்சைட்டில் வெளியிட வேண்டும்.

அதில் இடம், எந்த வகை, வரைபடம், விரிவாக்கம், நீர்பிடிப்பு பகுதி, கால்வாய், கொள்ளவு, மதகு பராமரித்தல், சர்வே எண் உள்ளிட்ட விபரங்கள் இருக்க வேண்டும். சர்வே விபரத்தில் ஆக்கிரமிப்பு விபரமும் இருக்க வேண்டும். இந்த விபரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் வெப்சைட்டில் வெளியிட வேண்டும். மேலும், அது தொடர்பில் கருத்துக்கள் கூற உரிய வசதி ஏற்படுத்த வேண்டும்.

இனி வரும் காலங்களில் விவசாயிகள் சங்கங்களின் மூலம் குடி மராமத்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து பணிகள் மேற்கொள்வதற்கு முன்னதாக அனைத்து விபரங்களையும் வெளியிட வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள முறையான வழிகாட்டுதல்களை வழங்கிடக்கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த போஸ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தனர்.

அம்மனுவில், "ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகள் ஒதுக்கீடு செய்ததை ரத்துசெய்ய வேண்டும். முறைப்படி தேர்தல் நடத்தி குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் பாசன மேலாண்மை முறை சட்டப்படி மேலாண்மை குழுவை உடனடியாக அமைத்து நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் மூலம் பொதுப்பணித் துறை ஒரு முழுமையான திட்டத்தை தயாரிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக நடைபெற்றுவந்தன. இந்நிலையில், இன்று அம்மனுக்கள் மீது இறுதி விசாரணை நடைபெற்றது.

இதனையடுத்து, உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், "தமிழ்நாடு விவசாயிகள் பாசன மேலாண்மை முறை சட்டப்படி மேலாண்மை குழுவை உடனடியாக அமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் மூலம் பொதுப்பணித்துறை ஒரு முழுமையான திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

அத்திட்டத்தில், நீர்ப்பிடிப்பு பகுதியின் எல்லை, ஆக்கிரமிப்பு மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது, உள் மற்றும் வரத்து கால்வாய்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட பணிகள் தொடர்பான தகவல்கள் இருக்க வேண்டும்.

மேலும், நில அளவை மற்றும் கிராம வரைப்படத்தின்படி, கால்வாய்கள் அடையாளம் காணும் பணியில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் ஈடுபடவேண்டும்.

கால்வாய்கள் மூலம் கூடுதல் மழை நீரை விவசாய நிலங்களில்பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். விவசாயிகள் பயனடையும் வகையில் கடைமடை வரை பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.

எல்லையை நிர்ணயிக்கும் வரைபடங்களில் நீர்நிலைகளை அடையாளம் காண வேண்டும். முறைகேடுகளாக நீர் நிலைகளில் பட்டா வழங்கியிருந்தால் அவற்றின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யூடிஆர் மற்றும் 'அ' பதிவேட்டின்படி, நீர்நிலைகள் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதில், அளவு குறைந்திருந்தால் அதற்குரிய காரணம் பதிவு செய்யப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு இருத்தால் அகற்ற வேண்டும்.

நீர்நிலைகளுக்கு வரத்து இல்லாவிட்டால் அதற்குரிய காரணத்தை கண்டறிய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து, குடிமராமத்து பணியில் மரக்கன்று நடுவது கட்டாயமாக வேண்டும்.

நீர்நிலைகளின் கரைகள் வலுவாக இருக்க, எல்லையை பாதுகாக்க தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாசன குழுக்கள் மரக்கன்றுகள் முறையாக பராமரித்து, நீர் நிலைகள் மற்றும் குடிமராமத்து தொடர்பான விபரங்களை வெப்சைட்டில் வெளியிட வேண்டும்.

அதில் இடம், எந்த வகை, வரைபடம், விரிவாக்கம், நீர்பிடிப்பு பகுதி, கால்வாய், கொள்ளவு, மதகு பராமரித்தல், சர்வே எண் உள்ளிட்ட விபரங்கள் இருக்க வேண்டும். சர்வே விபரத்தில் ஆக்கிரமிப்பு விபரமும் இருக்க வேண்டும். இந்த விபரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் வெப்சைட்டில் வெளியிட வேண்டும். மேலும், அது தொடர்பில் கருத்துக்கள் கூற உரிய வசதி ஏற்படுத்த வேண்டும்.

இனி வரும் காலங்களில் விவசாயிகள் சங்கங்களின் மூலம் குடி மராமத்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து பணிகள் மேற்கொள்வதற்கு முன்னதாக அனைத்து விபரங்களையும் வெளியிட வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.