ETV Bharat / state

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக் குவிப்பு வழக்குப்பதிய கோரி மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

author img

By

Published : Nov 6, 2020, 2:34 PM IST

சென்னை: தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக் குவிப்பு வழக்குப்பதிய கோரிய மனுவின் மீதான விசாரணையை டிசம்பர் 17ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றக் கிளை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக் குவிப்பு வழக்குப்பதியக் கோரி  மனு!
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக் குவிப்பு வழக்குப்பதியக் கோரி மனு!

தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக் குவிப்பு வழக்குப்பதிய கோரிய மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2014ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தொடுத்திருந்தார்.

அம்மனுவில், "2011ஆம் ஆண்டு முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார்.

ஏறத்தாழ ரூபாய் 7 கோடிக்கும் மேலாக முறைகேடான வழியில் சொத்து சேர்த்துள்ள ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப்பதிய வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று கிளை நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்" எனக் கோரிக்கையை முன்வைத்தார்.

வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், 1996ஆம் ஆண்டு திருத்தங்கல் பேரூராட்சித் தலைவராக ராஜேந்திர பாலாஜி பதவியில் இருந்தது முதல் அவருடைய சொத்து விவரங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல்செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு மேலதிக விசாரணையை ஏற்று விசாரணையை டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக் குவிப்பு வழக்குப்பதிய கோரிய மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2014ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தொடுத்திருந்தார்.

அம்மனுவில், "2011ஆம் ஆண்டு முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார்.

ஏறத்தாழ ரூபாய் 7 கோடிக்கும் மேலாக முறைகேடான வழியில் சொத்து சேர்த்துள்ள ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப்பதிய வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று கிளை நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்" எனக் கோரிக்கையை முன்வைத்தார்.

வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், 1996ஆம் ஆண்டு திருத்தங்கல் பேரூராட்சித் தலைவராக ராஜேந்திர பாலாஜி பதவியில் இருந்தது முதல் அவருடைய சொத்து விவரங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல்செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு மேலதிக விசாரணையை ஏற்று விசாரணையை டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.