ETV Bharat / state

திருச்சியில் அதிகரித்துவரும் கோவிட்-19 தாக்கம்!

திருச்சி: திருச்சியில் நேற்று (அக்.8) ஒரே நாளில் 84 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : Oct 9, 2020, 12:50 AM IST

திருச்சியில் அதிகரித்துவரும் கோவிட்-19 தாக்கம் - ஒரேநாளில் 84 பேருக்கு பாதிப்பு
திருச்சியில் அதிகரித்துவரும் கோவிட்-19 தாக்கம் - ஒரேநாளில் 84 பேருக்கு பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை (அக்.8) ஒரே நாளில் 84 நபர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 84 பேரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அத்துடன் அவர்கள் அனைவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாநகராட்சிப் பகுதியை கடந்து கிராமப்புறங்களிலும் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்துவருகிறது.

அங்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை 11 ஆயிரத்து 83 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10 ஆயிரத்து 212 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 715 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 156 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை (அக்.8) ஒரே நாளில் 84 நபர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 84 பேரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அத்துடன் அவர்கள் அனைவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாநகராட்சிப் பகுதியை கடந்து கிராமப்புறங்களிலும் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்துவருகிறது.

அங்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை 11 ஆயிரத்து 83 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10 ஆயிரத்து 212 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 715 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 156 பேர் உயிரிழந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.